7 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!!
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனாவை தடுக்க மிசோரத்தில் ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் ஏப்ரல் 26 ஆம் தேதி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவு ஊரடங்கு அமல்:
நாடு முழுவதும் கடந்த ஆண்டு முதல் கொரோனா நோய்த்தொற்று பரவி வருகிறது. செப்டம்பர் மாதம் வரை அதிகமாக இருந்த கொரோனா தாக்கம் அதன் பின்னர் படிப்படியாக குறைந்தது. இதனால் பல தளர்வுகள் வழங்கப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வந்தனர். தற்போது கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமெடுத்து வருகிறது.
TN Job “FB Group” Join Now
இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசும் பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் எண்ணிக்கை ஒரு நாளில் 3 லட்சத்தை நெருங்கி வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மிசோரம் மாநிலத்தில் உள்ள அய்சால் பகுதியில் கொரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ள காரணத்தினால் நேற்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே அங்கு இரவு ஊரடங்கு அமலில் உள்ளது.
சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு – புதுச்சேரி அரசு அறிவிப்பு!!
இந்த ஊரடங்கு ஏப்ரல் 26 ஆம் தேதி வரை 7 நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும். இந்த நாட்களில் மக்கள் அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வழிபாட்டு தலங்கள், கல்விநிறுவனங்கள், பூங்காங்கள், சுற்றுலா தலங்கள், சினிமா தியேட்டர்கள், உடற்பயிற்சி மையங்கள், சமுதாய கூடங்கள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள் மூடப்பட்டு உள்ளன. முழு ஊரடங்கு நேரத்தில் ஏற்கனவே அமலில் உள்ள இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.