தமிழகத்தில் மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு – அமைச்சர் தகவல்!

0
தமிழகத்தில் மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு - அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு - அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு – அமைச்சர் தகவல்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2000 ஆயிரத்தையும் தாண்டி பதிவாகிறது. அதனால் கொரோனா தடுப்பு பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்தி உள்ளது. இதையடுத்து கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,671 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 33,286 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 2,671 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை (ஜூலை 11) பள்ளிகள், கல்லூரிகள் & அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை – முக்கிய அறிவிப்பு!

அத்துடன் இன்று ஒரே நாளில் தொற்றில் இருந்து 2,516 பேர் குணமடைந்த துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 18,687 பேர் கொரோனா தொற்றுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் செங்கல்பட்டு 465 பேருக்கும், திருவள்ளூரில் 161 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பொது இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இதனை தொடர்ந்து கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அனைவருக்கும் செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் 85% பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். அத்துடன் தமிழகத்தில் அதிக அளவில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. அதனால் கொரோனா தொற்றிற்காக ஏற்படும் மரணங்களும் குறைந்துள்ளதாக இவர் கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!