தமிழகத்தில் நாளை (ஜூலை 11) பள்ளிகள், கல்லூரிகள் & அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை – முக்கிய அறிவிப்பு!
திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற நெல்லையப்பர் கோவில் ஆனிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு தேரோட்ட நிகழ்வு நடைபெற இருக்கிறது. இதனால் நாளை (ஜூலை 11) அம்மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் விடுமுறை
தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவில் புகழ்பெற்ற திருக்கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனிப் பெருந்திருவிழா விசேஷமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக் கோவிலுக்கு வருகை தருவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு நெல்லையப்பர் கோவில் ஆனிப் பெருந்திருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – ஹால் டிக்கெட் வெளியீடு!
தொடர்ந்து இந்த விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை (ஜூலை 11) நடைபெற இருக்கிறது. அந்த வகையில் நாளை நடைபெறும் தேரோட்டத்தை முன்னிட்டு அம்மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்கள், அரசு அலுலகங்கள் ஆகியவை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 11ம் தேதியன்று அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறை தொடர்பான உத்தரவை அம்மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சமீபத்தில் வெளியிட்டார்.
Exams Daily Mobile App Download
இது குறித்த உத்தரவில், ‘தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவில் தேரோட்டம் வரும் ஜூலை 11ம் தேதியன்று நடைபெற இருக்கிறது. இந்த தேரோட்டம் நடைபெறும் ஒரு நாள் மட்டும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. மேலும், ஜூலை 11ம் தேதியன்று ஏதேனும் அரசு பொதுத் தேர்வுகள் இருந்தால் அம்மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வருகை தரலாம். இப்போது இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு ஜூலை 23ம் தேதி வேலை நாளாக செயல்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.