தமிழக பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் கவனத்திற்கு – மறுதேர்வு எப்போது? அமைச்சர் அறிவிப்பு!

0
தமிழக பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் கவனத்திற்கு - மறுதேர்வு எப்போது? அமைச்சர் அறிவிப்பு!
தமிழக பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் கவனத்திற்கு - மறுதேர்வு எப்போது? அமைச்சர் அறிவிப்பு!
தமிழக பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் கவனத்திற்கு – மறுதேர்வு எப்போது? அமைச்சர் அறிவிப்பு!

தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் தேர்வு எழுதாத மாணவர்கள் மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான மறு தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மறுதேர்வு:

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு தான் தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டது. 2 ஆண்டுகளுமே பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்ட காரணத்தினால் மாணவர்களின் சிரமத்தை குறைக்க 35% வரைக்கும் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன. மேலும், பொதுத்தேர்வில் அனைத்து தேர்வுகளிலும் எளிமையாகத் தான் கேள்விகளும் கேட்கப்பட்டன. இதனால் மாணவர்கள் எந்தவித அச்சமும் இன்றி பொதுத் தேர்வை எழுதினர்.

TN Job “FB  Group” Join Now

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே ஜூன் 17ஆம் தேதி பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாவதாக இருந்தது. பின்னர் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றியமைக்கப்பட்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 9:30 மணிக்கும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நண்பகல் 12:00 மணிக்கும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பொதுத் தேர்விலும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

14 மாவட்டங்களில் மஞ்சள் அலெர்ட் எச்சரிக்கை – தொடரும் கனமழை! மக்கள் அவதி!

அதாவது, 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 96.32 சதவீதம் மாணவிகளும், 90.96 சதவீத மாணவர்களும் தேர்ச்சி அடைந்துள்ளனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தமாக 7,55,998 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனை தொடர்ந்து பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள் மற்றும் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் மறுத்தேர்வு வைக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை 25ஆம் தேதி முதல் மறு தேர்வும், 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் மறுதேர்வு நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!