14 மாவட்டங்களில் மஞ்சள் அலெர்ட் எச்சரிக்கை – தொடரும் கனமழை! மக்கள் அவதி!

0
14 மாவட்டங்களில் மஞ்சள் அலெர்ட் எச்சரிக்கை - தொடரும் கனமழை! மக்கள் அவதி!
14 மாவட்டங்களில் மஞ்சள் அலெர்ட் எச்சரிக்கை - தொடரும் கனமழை! மக்கள் அவதி!
14 மாவட்டங்களில் மஞ்சள் அலெர்ட் எச்சரிக்கை – தொடரும் கனமழை! மக்கள் அவதி!

கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தொடரும் கனமழை காரணமாக 14 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை

தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கியதிலிருந்து வெப்ப சலனம் காரணமாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. மேலும் நேற்று சென்னை உள்ளிட்ட இடங்களில் கனமழை காரணமாக பல்வேறு வகையான விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது கர்நாடக மாநிலத்திலும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து கொண்டிருக்கிறது. மேலும் பெங்களூரில் கடந்த சில நாட்களாக இரவில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து கொண்டு வருகிறது.

TN Job “FB  Group” Join Now

அதனால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனை தொடர்ந்து கே.ஆர்.புரத்தில் உள்ள சாய் லே-அவுட், எஸ்.ஆர். லே-அவுட், காயத்ரி லே-அவுட் உள்ளிட்ட இடங்களில் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் சிக்கின. மேலும் இங்குள்ள சிங்காபுரா பகுதியில் ராஜகால்வாய் உடைந்து வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. அத்துடன் கே.ஆர்.புரம் அருகே உள்ள கிராமத்தில் ஏரியின் கரை உடைந்து ஊருக்குள் நீர் புகுந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் கதக் மாவட்டத்தில் இரவு முழுவதும் இடி, மின்னலுடன் பலத்த காற்று பெய்து இங்குள்ள தாலுகாவில் கிராமங்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.

ஜூலை மாதத்தில் 10 நாட்களுக்கு வங்கி விடுமுறைகள் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

இதனை தொடர்ந்து ரோனாவில் உள்ள இடகி கிராமத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக அரசு பேருந்து வெள்ளத்தில் சிக்கி கொண்டது. அதனால் பேருந்தில் இருந்த பயணிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து பெய்து கொண்டு வரும் கனமழையால் இங்குள்ள 14 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதன் காரணமாக பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அத்துடன் மாநிலத்தில் வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளை சுற்றி பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!