தமிழக கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் ஜூலை 15ல் ஆலோசனை – இதற்காக தான்!
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாதங்கள் ஆகியும் மாணவர்களுக்கு இன்னும் இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்படவில்லை. இது குறித்து வரும் ஜூலை 15ஆம் தேதி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்த இருக்கிறார்.
இலவச நோட்டு புத்தகங்கள்
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி சார்ந்த பள்ளிகளில் பயிலும் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள், இலவச சைக்கிள், சீருடைகள், மடிக்கணினிகள் முதலான பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. எப்போதும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறந்த முதல் நாளிலேயே இலவச நோட்டு புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும். ஆனால், இந்த ஆண்டு ஜூன் 13ஆம் தேதியிலிருந்து மாணவர்களுக்கு அடுத்த கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.
ரேஷன் கடை ஊழியர்களுக்கான ஜாக்பாட் அறிவிப்பு – தமிழக அரசு ஏற்பாடு!
அதாவது, பள்ளிகள் திறந்து ஒரு மாதங்களாகவுள்ள நிலையிலும் கூட தற்போது வரைக்கும் மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் தனது சொந்த செலவிலேயே நோட் புத்தகங்கள் வாங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்களும் எப்போது இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்படும் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் இலவச நோட்டு புத்தகங்கள் வழங்குவது குறித்தான எந்த அறிவிப்பையும் தமிழக அரசு அறிவிக்காத காரணத்தினால் வேதனை அளிக்கிறது எனவும் பெற்றோர்கள் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் இலவச பாடப்புத்தகங்கள் இன்னும் பள்ளி மாணவர்களுக்கு வினியோகம் செய்யப்படாததது குறித்து வரும் ஜூலை 15 ஆம் தேதி சென்னையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்த இருக்கிறார். அதாவது இலவச புத்தக வினியோகத்துடன் சேர்த்து நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளின் அங்கீகாரம் பற்றியும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.