TN TRB 9494 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – அமைச்சர் தகவல்!
தமிழகத்தில், அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கான ஆசிரியர் பணியிடங்கள், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களில் எந்த ஒரு போட்டி தேர்வுகளும் நடத்தப்படாமல் இருந்தது. இருப்பினும் தற்போது அனைத்து போட்டித் தேர்வுகளுக்கான அறிவிப்புகளும் வெளியாகி வருகிறது. இதை தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
முக்கிய அறிவிப்பு:
தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 18-ந் தேதி 2022-2023-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் (19-ந் தேதி) வேளாண் பட்ஜெட் தாக்கலானது. பொது மற்றும் வேளாண் பட்ஜெட்டுகள் மீதான விவாதம் 21-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை நடந்து முடிந்தது. மேலும் தமிழக சட்டசபை ஏப்ரல் 6 மீண்டும் கூடியது. அதில், துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. முன்னதாக கேள்வி நேரமும் எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். இந்த கூட்டத்தொடர், மே 10ம் தேதி வரை நடைபெற உள்ளது.
தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 13) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
இந்நிலையில் நேற்று நடத்த சட்டப்பேரவை மானியக் கோரிக்கை விவாதத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டார். அப்போது நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் 9,494 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தாக்குதல் காரணமாக கடந்த 2 வருடங்களில் பொதுமுடக்கம் ஏற்பட்டு, அனைத்து கல்வி நிறுவனங்களும் முடக்கப்பட்டது. இதனால் மாநிலம் முழுவதும் பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர். மேலும் மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டன. தற்போது தாக்கம் குறைந்து அனைவரும் இயல்பு நிலைக்கு நிரம்பி வருகின்றனர். பள்ளிகளும் திறக்கப்பட்டு மாணவர்களும் உற்சாகமாக பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
கொரோனா வருகைக்கு பின்னர் தற்போது அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து உள்ளது. இதனால் சில மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிப்புக்கு உள்ளாகிறது. இதனால் பல தரப்பிலிருந்து அரசு பள்ளிகளில் மேலும் ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறைக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். அண்மையில் தேர்வு வாரியம் TET தேர்வு அறிவிப்பை கடந்த மார்ச் 7ம் தேதி வெளியானது . இந்த அறிவிப்பு அடிப்படையில் TET தேர்வுக்கான விண்ணப்ப பதிவு மார்ச் 14ம் தேதி முதல் ஏப்ரல் 13ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பள்ளி கல்வித்துறை அமைச்சர் நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் 9,494 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவித்த தகவல், ஆசிரியர் நியமனத்திற்காக காத்திருக்கும் பலருக்கு மகிழ்ச்சியான தகவலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.