தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 13) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை தேர் திருவிழா நாளை நடைபெற இருப்பதால் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.
உள்ளூர் விடுமுறை:
ஆயிரம் ஆண்டுகளுக்கு பழமையான மற்றும் உலகப் புகழ்பெற்ற கோயில் என்ற பெருமையைப் பெற்றது தஞ்சை பெரிய கோவில். மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த தஞ்சை பெரிய கோவிலுக்கு பல நாடுகளிலிருந்தும், பல மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 18 நாட்கள் விமர்சையாக நடைபெறும். 18 நாட்களுமே கடவுளுக்கு பலவிதமான பூஜைகள் மற்றும் அலங்காரங்கள் செய்து திருவிழாவை நடத்துவர்.
தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை – மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்!
கடந்த இரண்டு ஆண்டுகளுமே கொரோனா பரவலின் காரணமாக தமிழகத்தில் உள்ள எந்த கோவில்களும் திறக்கப்படவில்லை மற்றும் இரண்டு ஆண்டுகளும் எந்த கோவிலிலும் திருவிழா நடைபெறவில்லை. தற்போது தமிழகத்தில் ஓரளவு கொரோனா பரவல் குறைந்த காரணத்தினால் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா நாளை நடைபெற இருக்கிறது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தேர்த் திருவிழா நடைபெற இருப்பதால் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். மேலும் நாளை மாவட்ட கருவூலம் மற்றும் அதன் கிளை கருவூலங்கள் குறைவான பணியாளர்களுடன் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுகட்டும் விதமாக மே 14-ஆம் தேதி பணி நாளாக அறிவித்துள்ளார்.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்