தமிழகத்தில் பள்ளிகள் தொடங்கும் நேரம் மாற்றம் – அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் சென்ற கல்வியாண்டு காலதாமதமாக தொடங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மே 14 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படும் நேரம் குறித்து கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் செயல்படும் நேரம்:
கடந்த 2 ஆண்டுகளில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. அதனால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது. மேலும் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படாமல் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு பின் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் வழக்கம் போல வகுப்புகளுக்கு வந்து சென்றனர்.
TNPSC Group 4 VAO தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – தயாராவது எப்படி? முழு விவரம் இதோ!
மேலும் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வுகள் தற்போது நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், 2022-23 கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வுகள் அடுத்த ஆண்டு மார்ச் 13ம் தேதி 12ம் வகுப்பிற்கும், 14 ஆம் தேதி 11ஆம் வகுப்பிற்கும், ஏப்ரல் 3 ஆம் தேதி பத்தாம் வகுப்பிற்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என தெரிவித்தார்.
Exams Daily Mobile App Download
இதை தொடர்ந்து பேசிய அவர் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்பாட்டிற்கு வர இருப்பதாகவும், அவ்வாறு வந்தால் காலை 8.30 மணிக்கு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் எனவும் 9 மணி முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடை, பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட இலவச திட்டங்கள் பள்ளி துவங்கிய ஒரு மாத காலத்திற்குள் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ள நிலையில் சிபிஎஸ்இ பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ள நிலையில் அவர்களுக்கு ஜூன் மாதம் திறக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.