
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 6 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் – அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்!
தமிழகத்தில் நெல்லை மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்ட நிலையில் அந்த மாவட்டத்திற்கு தலைமை அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு இருக்கிறது.
அரசு மருத்துவமனை
தமிழகத்தில் நெல்லை மாவட்டம் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்த நிலையில் தலைமை அரசு மருத்துவமனை தென்காசியில் செயல்பட்டது. இந்நிலையில் நெல்லையில் தலைமை அரசு மருத்துவமனை அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. அதனை தொடர்ந்து வள்ளியூரில் மாவட்ட தலைமை மருத்துவமனை அமைக்கப்படும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதனை தொடர்த்து மருத்துவமனை கட்ட 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அடிக்கல் நாட்டும் பணி வள்ளியூரில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது.
பெண் குழந்தை வைத்துள்ளீர்களா? அப்போ இந்த திட்டதில் உடனே சேருங்க.. முழு விவரம் உள்ளே!
அதில் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் முன்னிலையில் புதிய மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். அதன் பின் பேசிய அமைச்சர், தமிழகம் முழுவதும் 1018 கோடி மதிப்பில் 25 மாவட்டங்களில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் கட்டப்பட்டு வருகிறது. ஏற்கனவே 18 மருத்துவமனைகள் இருந்த நிலையில் இந்த ஆண்டு 25 மருத்துவமனைகள் காட்டப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
மேலும் பேசிய அவர் புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி, பெரம்பலூர், மயிலாடுதுறை, உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படுகிறது. இது குறித்து முதல்வர் மற்றும் பிரதமரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரிகளை விரைந்து அமைக்கும் வகையில் அடுத்த வாரம் துறை செயலாளர் அடங்கிய குழு ஒன்றிய அமைச்சரை நேரில் சந்திக்க உள்ளோம் என தெரிவித்துள்ளார்.