பெண் குழந்தை வைத்துள்ளீர்களா? அப்போ இந்த திட்டதில் உடனே சேருங்க.. முழு விவரம் உள்ளே!
இந்தியாவில் பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சுகன்யா சம்ரித்தி யோஜனா (செல்வ மகள்) என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் மற்ற திட்டங்களை காட்டிலும் வட்டி விகிதம் அதிகம் வழங்கப்படுகிறது.
சேமிப்பு திட்டம்:
இந்தியாவில் பெண் குழந்தைகளுக்கு உதவும் வகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு செல்வ மகள் (சுகன்யா சம்ரித்தி யோஜனா) சேமிப்பு என்ற திட்டம் திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டம் பெண் குழந்தைகளை பெற்றுள்ள மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த செல்வமகள் திட்டத்தில் அண்மையில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு தற்போது 8% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 10 வயதிற்குட்ட பெண் குழந்தைகளின் பெயரில் இத்திட்டத்தில் சேரலாம்.
ICMR – NARI நிறுவனத்தில் ரூ.1,00000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு!
இதில் குறைந்தபட்சம் ரூ. 250 செலுத்தி முதலீட்டை தொடங்கலாம். 21 ஆண்டுகள் முதிர்வு காலம் இதற்கு முன் பணத்தை எடுக்க முடியாது. ஏதேனும் அவசர காரணங்களுக்கு மட்டுமே விதிகளுக்குட்பட்டு பணத்தை பெறலாம். மேலும் குழந்தைக்கு 18 வயது ஆகும் போது அல்லது குழந்தையின் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு பணத்தை எடுத்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது.