தமிழகத்தில் 10,000 ஆசிரியர் பணியிடத்திற்கான போட்டித்தேர்வு எப்போது? – வலுக்கும் கோரிக்கை!

0
தமிழகத்தில் 10,000 ஆசிரியர் பணியிடத்திற்கான போட்டித்தேர்வு எப்போது? - வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் 10,000 ஆசிரியர் பணியிடத்திற்கான போட்டித்தேர்வு எப்போது? - வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் 10,000 ஆசிரியர் பணியிடத்திற்கான போட்டித்தேர்வு எப்போது? – வலுக்கும் கோரிக்கை!

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வு எப்போது நடைபெறும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகிறது.

போட்டித்தேர்வு:

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் இடைநிலை, முதுநிலை பட்டதாரி, வட்டார கல்வி அலுவலர், கல்வி உதவி பேராசிரியர் என பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் இருக்கின்றன. கடந்த 2012 ஆம் ஆண்டு தமிழகத்தில் முதன்முறையாக நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கும் தற்போது வரைக்கும் பணி நியமனம் வழங்கப்படவில்லை. அவர்கள், தற்போது வரை ஆசிரியர் பணிக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ICMR – NARI நிறுவனத்தில் ரூ.1,00000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு!

இந்நிலையில், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கும் போட்டி தேர்வு நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 2012ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு வரும் மே மாதம் போட்டித் தேர்வு குறித்தான அறிவிப்பு வெளியாகும் என முன்னர் தெரிவிக்கபட்டது.

Follow our Instagram for more Latest Updates

ஆனால் ஜூன் மாதம் துவங்கி விட்ட போதும் இன்னும் அறிவிப்பு வெளியாகாததால் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லல்படுகின்றனர். அதனால் விரைந்து இதற்கான அறிவிப்பை வெளியிடுமாறு கோரிக்கைகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!