மே மாத நேரடி தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைப்பு – மத்திய அரசு உத்தரவு!!!
நாட்டில் கொரோனா தொற்று தாக்கத்தின் காரணமாக மே மாதம் நடக்க இருந்த நேரடி தேர்வுகள் அனைத்தையும் தள்ளி வைக்க வேண்டும் என்று மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.
நேரடி தேர்வுகள்:
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் தேசிய அளவிலான பல நுழைவுத்தேர்வுகள், பொதுத்தேர்வுகள், பல்கலை தேர்வுகள், கல்லூரி தேர்வுகள் அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டும் சில தேர்வுகள் ரத்து செய்யப்பட்டும் அறிவிப்பு வெளியானது. அதே போல் தற்போது மே மாதத்தில் திட்டமிட்டுள்ள நேரடி தேர்வுகளை பற்றி மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் தனியார் பள்ளிகள் திறப்பு – தாளாளர் சங்கத்தினர் கோரிக்கை!!
நாடு முழுவதும் உள்ள அனைத்து துணை வேந்தர்களுக்கும் மனித வள மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலர் அமித் கரே கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், தற்போதுள்ள சூழ்நிலையின் அடிப்படையில், 2021 மே மாதத்தில் திட்டமிடப்பட்ட அனைத்து நேரடி தேர்வுகளையும் தள்ளி வைக்குமாறு மத்திய நிதியளிக்கப்பட்ட நிறுவங்களின் தலைவர்களை கேட்டுக் கொள்வதாக எழுதியுள்ளார்.
மேலும், ஆன்லைன் முறையில் திட்டமிடப்பட்ட தேர்வுகளை நடத்தலாம் என்றும் அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா சூழல் நிலையை மறு ஆய்வு செய்து ஜூன் முதல் வாரத்தில் தேர்வு தொடர்பான முடிவுகளை மத்திய அரசு கல்வி நிறுவங்களுக்கு அறிவிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்