தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான சான்றிதழில் மதிப்பெண்கள் – அரசுக்கு கோரிக்கை!

0
தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான சான்றிதழில் மதிப்பெண்கள் - அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான சான்றிதழில் மதிப்பெண்கள் - அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான சான்றிதழில் மதிப்பெண்கள் – அரசுக்கு கோரிக்கை!

தமிழகத்தில் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழில் மதிப்பெண்கள் குறிப்பிட வேண்டும் என்று அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

10ம் வகுப்பு சான்றிதழ்:

தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் காரணமாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இதை அடுத்து தற்போது 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உயர்கல்வி வகுப்பில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் 10ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழில் தேர்ச்சி பெற்றதாக மட்டுமே குறிப்பிட்டிருக்கும் என்றும் மதிப்பெண்கள் இடம் பெறாது என்று பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிக்கை வெளியிட்டிருந்தது. தற்போது இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழும்பி வருகிறது. அதன்படி அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

மருத்துவ படிப்புகளுக்கான இறுதியாண்டு தேர்வு ஒத்திவைப்பு? நீதிமன்றம் மறுப்பு!

அதன்படி அவர் கூறியதாவது, தமிழக 10ம் வகுப்பு மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழில் மதிப்பெண் குறிப்பிடாது என்று வெளியிடப்பட்ட அறிக்கை அதிர்ச்சியடைய செய்துள்ளது. சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு 10 மற்றும் 11ம் வகுப்பு இறுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 30%மதிப்பெண்களும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு முன் நடைபெற்ற தேர்வின் மதிப்பெண்களின் அடிப்படையில் 40% மதிப்பெண்கள் வழங்க போவதாக கூறப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

மேலும் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களுக்கு உள் மதிப்பீடு படி 20% மற்றும் பொதுத்தேர்வுக்கு முன் நடைபெற்ற தேர்வுகளின் மதிப்பெண்கள் அடிப்படையில் 80% மதிப்பெண்கள் வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது. எனவே எந்த மதிப்பின் அடிப்படையில் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை, பாலிடெக்னிக் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறதோ அந்த அடிப்படையில் பத்தாம் வகுப்பிற்கான மதிப்பெண்கள் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு அதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும். எனவே இது குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இதில் தலையிட்டு எதாவது ஒரு வழியை பின்பற்றி 10ம் வகுப்பு சான்றிதழில் மதிப்பெண் இடம்பெற வழிவகை செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!