மருத்துவ படிப்புகளுக்கான இறுதியாண்டு தேர்வு ஒத்திவைப்பு? நீதிமன்றம் மறுப்பு!
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாததால் எம்.டி., எம்.எஸ் மருத்துவ படிப்புகளுக்கான இறுதியாண்டு தேர்வை ஒத்திவைக்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் அதற்கு தற்போது மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுகள் அறிவிப்பு:
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மேலும் 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள், சிபிஎஸ்இ மற்றும் மாநில அளவிலான தேர்வுகள் நடத்தப்படாமல் ரத்து செய்யப்பட்டன. மேலும் மத்திய அரசு தேர்வுகளான JEE, NEET தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொரோனா 3ம் அலையில் மீண்டும் கடுமையான ஊரடங்கு? மாநில அரசு எச்சரிக்கை!
மேலும் கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள முதுகலை மருத்துவ மாணவர்கள் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க பணியமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதால், அந்த மாணவர்களுக்கு தேர்வுகள் ஒத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால் கொரோனா காரணமாக தேர்வுகளுக்கு தயாராக மாணவர்களுக்கு அவகாசம் வழங்கப்பட வேண்டும் என என்.எம்.சியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்டது. அதில், COVID கடமைகளைச் செய்யும் பி.ஜி. மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்த கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அதற்கு உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தேர்ச்சி பெறாமல் சிகிச்சை அளிப்பது சரியா என கேள்வி எழுப்பப்பட்டது. இந்நிலையில் மனுதாரர் கொரோனா நோயாளிகளையும், தேர்வுகளையும் ஒரே நேரத்தில் கவனிப்பதால் மாணவர்களுக்கு சிரமம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் எம்.டி., எம்.எஸ் மருத்துவ படிப்புகளுக்கான இறுதியாண்டு தேர்வை ஒத்திவைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.