கொரோனா 3ம் அலையில் மீண்டும் கடுமையான ஊரடங்கு? மாநில அரசு எச்சரிக்கை!
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா மூன்றாம் அலை தீவிரமடைய தொடங்கினால் காலதாமதமின்றி கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா மூன்றாம் அலை:
நாடு முழுவதும் அதிகம் கொரோனா பரவல் ஏற்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. இதனால் இந்த மாநிலத்தில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டன. மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூடிய வெளியே வர அனுமதி மறுக்கப்பட்டது. இதன் காரணமாக கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஜூன் 30 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு உத்தரவு!
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா மூன்றாம் அலை அறிகுறியான ‘டெல்டா பிளஸ்’ பரிமாண வளர்ச்சி அடைந்த வைரஸ் இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளன. இதன் காரணமாக தற்போது தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர். மாநில நிவாரண மற்றும் மறுவாழ்வுத் துறையின் முதன்மை செயலாளர் அசீம் குப்தா கொரோனா மூன்றாம் அலை பரவல் அதிகரித்தால் மீண்டும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், முன்னதாக வகுக்கப்பட்ட அதன் ஐந்து நிலை அன்லாக் திட்டத்துடன் இணைந்திருக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஜூன் 16 அன்று முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கலந்து கொண்ட கூட்டத்தில், கொரோனா மூன்றாவது அலை குறித்து மாநில சுகாதாரத் துறை விவாதித்தது. நோயாளிகளின் எண்ணிக்கை எட்டு லட்சம் வரை வரக்கூடும், அவர்களில் 10 சதவீதம் பேர் குழந்தைகளாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
டெல்டா பிளஸ் மாறுபாடு மகாராஷ்டிராவில் மூன்றாவது அலைகளைத் தூண்டக்கூடும். இது இருமடங்கு விகிதத்தில் பரவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா விதிமுறைகளை மக்கள் சரியான முறையில் பின்பற்றாவிட்டால் இரண்டாம் அலையை போல மூன்றாம் அலையில் பல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மாநில அரசு எச்சரித்துள்ளது.