தமிழகத்தில் 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை முடித்தவர்கள் கவனத்திற்கு – மார்ச் 26 முகாம்!
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்புகளை அரசு ஏற்படுத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து சேலத்தில் வருகிற 26ம் தேதி அன்று தனியார் துறை இணைந்து நடத்தும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் கலந்து கொள்ள தேவையான தகுதிகளைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.
வேலைவாய்ப்பு முகாம்:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டது. இதனால் ஏராளமான இளைஞர்கள் தங்களின் வேலைவாய்ப்பை இழந்தனர். அத்துடன் அரசின் சார்பாகவும் எந்தவொரு வேலைவாய்ப்பும் ஏற்படுத்தி தர முடியவில்லை. தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்புகளை அரசு உருவாக்கி வருகிறது. இதனை தொடர்ந்து சேலத்தில் வருகிற 26ம் தேதி அன்று முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் இணைந்து நடத்தும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
மார்ச் 25 முதல் மீண்டும் முழு ஊரடங்கு அமல் – அதிகாரி விளக்கம்!
இம்முகாம் கணேஷ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் சார்ந்த முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் இணைந்து வேலைவாய்ப்பு முகாம் நடத்த உள்ளது. அத்துடன் இதில் 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். அத்துடன் ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி உள்ளிட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் கலந்து கொள்ளலாம்.
வேலையில்லா இளைஞர்கள் இதில் கலந்து கொண்டு தங்களின் தகுதிக்கு ஏற்ப பணிகளை பெற்று கொள்ளலாம் என்று சேலம் ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார். அத்துடன் இம்முகாமில் கலந்து கொண்டு வேலையளிக்க நினைக்கும் நிறுவனங்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெற [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். அத்துடன் 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டும் அறிந்து கொள்ளலாம்.