மார்ச் 25 முதல் மீண்டும் முழு ஊரடங்கு அமல் – அதிகாரி விளக்கம்!
சீனாவின் ஹாங்காங் நகரில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதனால் அந்நகரில் முழு ஊரடங்கு அமல்படுத்த போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.
ஊரடங்கு:
கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் இருந்து சீனாவில் வுகான் நகரில் இருந்து கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியது. இந்த வைரஸ் சீனாவை தொடர்ந்து பல நாடுகளிலும் பரவத் தொடங்கியது. இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசுகள் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை அறிவித்தது. தடுப்பு நடவடிக்கையாக அந்நாட்டில் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதன்படி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முற்றிலும் தடை விதிக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் வெளியில் செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
ரூ.700க்கும் கீழ் சமையல் கேஸ் சிலிண்டரின் விலை – கலப்பு எரிவாயு சிலிண்டர் அறிமுகம்!
மேலும் கிருமி நாசினிகளை பயன்படுத்த வேண்டும் என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு பொது மக்களுக்கு செலுத்தும் பணிகள் அனைத்து நாடுகளிலும் தொடங்கியது. இதன் விளைவாக கொரோனா பாதிப்பு இறங்கு முகத்தில் செல்லத் தொடங்கியது. இந்த நேரத்தில் கொரோனாவின் பிறப்பிடமான சீனாவின் ஷாங்காய் நகரில் கடந்த மூன்று நாட்களாக, கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை 1,000 ஆக அதிகரித்துள்ளது.
இதனால் அந்நகரில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இதனால் கடைகள் மூடப்படும் வெளியில் செல்ல முடியாது என்ற அச்சத்தில் பொது மக்கள் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து பொருட்களை வாங்கிய வண்ணம் உள்ளனர். இது குறித்து ஷாங்காய் நகர அதிகாரி கூறும்போது சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். முழு ஊரடங்கு குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.