மணிப்பூர் மாநில அரசு ஈஸ்டர் பண்டிகையின் அதிகாரப்பூர்வ விடுமுறையை ரத்து செய்து இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
விடுமுறை ரத்து
மணிப்பூர் மாநில அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், மார்ச் 31 ஆம் தேதி ஈஸ்டர் விடுமுறை ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவர்களுக்கு ஈஸ்டர் மிக முக்கியமான பண்டிகை நாளாக இருக்கிறது. இயேசு கிறிஸ்து சிலுவையில் இருந்து உயிர்த்தெழுந்ததை நினைவுகூரும் நாள் இது ஆகும். அதனால் அரசு விடுமுறையை ரத்து செய்து இருப்பது அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
Cognizant நிறுவனத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
அரசின் இந்த நடவடிக்கையால் மணிப்பூரில் உள்ள குக்கி அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனால் மாநிலத்தில் ஆளும் அரசு இந்த உத்தரவை திரும்பப் பெற தயாராக இல்லை. ஏற்கனவே ரிசர்வ் வங்கி மார்ச் 31ம் தேதியை வேலை நாளாக அறிவித்துள்ள நிலையில், மார்ச் 30 சனிக்கிழமை மற்றும் மார்ச் 31 ஞாயிறு என்பதால் அன்றைய தினம் விடுமுறையை ரத்து செய்து மணிப்பூர் அரசு முடிவு செய்துள்ளது.