மார்ச் 15 முதல் 21 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு – முதல்வர் அறிவிப்பு!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக மார்ச் மாதம் 15 முதல் 21 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்த உள்ளதாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.
முழு ஊரடங்கு அமல்:
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் கொரோனா இரண்டாம் பரவல் அலை அதிகரித்து வருவதால் முழு ஊரடங்கு மார்ச் மாதம் 15 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை அமல்படுத்த உள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 1800 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் தற்போது ஊரடங்கு விதிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மக்களுக்கு அடிப்படை தேவைகளான காய்கறிகள், பழங்கள், பால் போன்றவை விற்பனை செய்யும் அங்காடிகள் மட்டுமே செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியதாவது, “மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே நாளில் 1800 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மார்ச் மாதம் 15 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசு பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை – தலைமை ஆசிரியருக்கு கொரோனா!!
மாநிலத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதை பொறுத்து பிற பகுதிகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்படும். இது தொடர்பாக அடுத்த இரண்டு நாட்களில் முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்படும்”, இவ்வாறு அவர் தெரிவித்தார். நாக்பூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் ஊரடங்கு அமலில் இருக்கும். ஏற்கனவே ஜல்கான் மாவட்டத்தில் கடந்த திங்கள்கிழமை காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.