மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பெயர் இல்லை.. ஒரே போன் காலில்  தீர்வு கண்ட அமைச்சர்!

0
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பெயர் இல்லை.. ஒரே போன் காலில் தீர்வு கண்ட அமைச்சர்!
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பெயர் இல்லை.. ஒரே போன் காலில் தீர்வு கண்ட அமைச்சர்!
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பெயர் இல்லை.. ஒரே போன் காலில்  தீர்வு கண்ட அமைச்சர்!

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பலன் அடையாத பெண்ணின் புகாருக்கு அமைச்சர் நேரடியாக நடவடிக்கை எடுத்துள்ளார்.

மகளிர் உரிமை தொகை:

வாழ்நாள் முழுவதும் குடும்பத்தின் நலனிற்காக உழைக்கும் மகளிரின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையிலும், அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையிலும் தமிழக அரசு 2023 செப்டம்பர் மாதம் மகளிர் உரிமை திட்டத்தை செயல்படுத்தியது. திட்டத்தின் வாயிலாக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. தற்போது வரை இரண்டு கட்டங்களாக மொத்தம் ஒரு கோடியே 15 லட்சம் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் பயனாளர்களாக இணைக்கப்பட்டுள்ளனர். விண்ணப்பித்த அனைவருக்கும் தேர்தலுக்குப் பின்னர் மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

காவேரி மேலாண்மை ஆணைய கூட்டம் – ஏப்ரல் 4ல் ஏற்பாடு!

இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் அலுவலக திறப்பு விழாவில் தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் பெண் ஒருவர்  தனக்கு உரிமை தொகை கிடைக்கவில்லை என்று கூறினார். இதன் பின்னர் அமைச்சர் அதிகாரிகளை உடனடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட பெண்ணின் விவரங்களை தெரிவித்து தேர்தலுக்குப் பின்னர் அவரது பெயரை உரிமை தொகை திட்டத்தில் இணைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!