தமிழகத்தில் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை ரத்து – தலைவர் அறிவிப்பு!

0
அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை ரத்து
அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை ரத்து
தமிழகத்தில் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை ரத்து – தலைவர் அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களும் நாளை சனிக்கிழமை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை இயங்கும்:

பொது மக்களிடம் பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையிலும், அரசின் வருவாயை பெருக்கும் அடிப்படையிலும் 2023-24 ஆம் நிதி ஆண்டின் இறுதி மாதம் ஆன மார்ச் கடைசி சனிக்கிழமை ஆன 30-ஆம் தேதி மட்டும் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களும் செயல்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல் காலை 10 மணி முதல் ஆவணப்பதிவு முடியும் வரை செயல்பாட்டில் அலுவலகங்கள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணிசுமையை குறைத்தால் ஊதிய குறைப்பை ஏற்க தயார் – வெளியான அறிக்கை முடிவுகள்!

விடுமுறை நாள் ஆவண பதிவிற்கான கட்டணமும் சேர்த்து வசூலிக்கப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்றைய தினங்களில் ஸ்டார் 2.0 திட்டப்படி அனைத்து அலுவலங்களிலும் பதிவுப்பணி இணைய வழி தடை என்று நடைபெற ஏதுவாக பொதுமக்களுக்கு முன் பதிவு செய்திடும் வசதி மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பொதுமக்களுக்கான உதவி மையம் மற்றும் உதவி எண் வசதி ஆகியவற்றை எவ்வித குறைபாடும் என்று ஏற்படுத்திட பதிவுத்துறை தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!