ஏப்ரல் 26ம் தேதி பொது விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!
கேரள மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெறுவதையொட்டி, ஏப்ரல் 26-ஆம் தேதி பொது விடுமுறை என்று அரசு அறிவித்துள்ளது.
பொது விடுமுறை:
மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளில் தனியார், தொழில் நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும் என கேரள அரசு தெரிவித்துள்ளது. அதாவது அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள், கடைகள் மற்றும் வணிக நிறுவனச் சட்டத்தின் கீழ் உள்ள தனியார் நிறுவனங்கள், தொழில் மையங்கள் மற்றும் பிற நிறுவனங்களும் விடுமுறையைக் கடைப்பிடிப்பதை உறுதி செய்யும் பொறுப்பு தொழிலாளர் ஆணையரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
பத்தாம் வகுப்பு பொது தேர்வு ஏப்ரல் 1 முதல் தொடக்கம் – கல்வித்துறை அறிவிப்பு!
இந்த உத்தரவின்படி, இந்த விடுமுறைக்காக ஊழியர்களின் ஊதியத்தில் எந்த வித சம்பள குறைப்பும் நிகழாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள 20 லோக்சபா தொகுதிகளுக்கு ஏப்ரல் 26ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் அன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக ராஜஸ்தான் மாநிலத்திலும் தேர்தல் நாள் அன்று பொது விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.