ஐபிஎல் நடப்பாண்டு போட்டியில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டியில் ராஜஸ்தான் மிகவும் அபாரமாக வெற்றியை பெற்றது.
RR vs DC போட்டி :
நடப்பாண்டு ஐபிஎல் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக தொடங்கி நேற்று தொடரின் ஒன்பதாவது போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையே ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்றது. பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்று டெல்லி கேப்பிட்டல் அணி முதலில் வந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் ராஜஸ்தான் முதலில் பேட்டிங் களத்தில் இறங்கியது. அதிரடியான பந்துவீச்சுக்கு ஈடு கொடுத்து ராஜஸ்தான் அணியின் வீரர்கள் 20 ஓவர் முடிவில் இறுதியாக 185 ரன்கள் அடித்தனர்.
UPSC ESE 2024 முதல்நிலை தேர்வு – முடிவுகள் வெளியீடு!
இரண்டாவதாக களமிறங்கிய டெல்லி கேப்பிடல் அணி 186 ரன்கள் இலக்குடன் ஆட்டத்தை தொடங்கியது. இலக்கை எளிதாக வெல்ல முடியும் என்ற ரீதியில் நடந்து வந்த ஆட்டத்தில் 15 வது ஓவருக்குப் பிறகு ரன் ரேட்டை பவுலர்கள் சரமாரியாக குறைத்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 173 ரன்கள் எடுத்து வெற்றியை தவறவிட்டது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர் வெற்றியை பதிவு செய்ததன் மூலம் ராஜஸ்தான் அணி புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.