பத்தாம் வகுப்பு பொது தேர்வு ஏப்ரல் 1 முதல் தொடக்கம் – கல்வித்துறை அறிவிப்பு!
கோவா கல்வி வாரியத்தின் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாக கல்வி வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பொதுத்தேர்வு தேதி
நடப்பு கல்வி ஆண்டு விரைவில் முடிவடைய இருக்கும் நிலையில் பல்வேறு மாநில அரசுகள் பொதுத்தேர்வு குறித்து அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. ஒரு சில மாநிலங்களில் ஏற்கனவே பொதுத் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கோவா கல்வி வாரியத்தின் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாக மூத்த அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
பணிசுமையை குறைத்தால் ஊதிய குறைப்பை ஏற்க தயார் – வெளியான அறிக்கை முடிவுகள்!
இந்தத் தேர்வுகள் ஏப்ரல் 24ஆம் தேதி முதல் முடிவடைய இருப்பதாகவும் கோவா இடைநிலை மற்றும் மேல்நிலை கல்வி வாரியத்தின் செயலாளர் வித்யாத்தா நாயக் தெரிவித்துள்ளார். மேலும் பொதுத்தேரவுகள் காலை 9:30 மணிக்கு தொடங்கும் எனவும், மாநிலம் முழுவதும் 31 மையங்களில் இந்த தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த ஆண்டு தேர்வை 9757 மாணவர்கள் 9816 மாணவிகள் என மொத்தம் 19 ஆயிரத்து 573 மாணவர்கள் எழுத இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.