தமிழகத்தில் ஏப்.17 & 18ம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கம் – அரசின் ஏற்பாடு!

0
தமிழகத்தில் ஏப்.17 & 18ம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கம் - அரசின் ஏற்பாடு!
தமிழகத்தில் ஏப்.17 & 18ம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கம் - அரசின் ஏற்பாடு!
தமிழகத்தில் ஏப்.17 & 18ம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கம் – அரசின் ஏற்பாடு!

நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழக போக்குவரத்து துறை ஆனது பயணிகளின் வசதிக்கேற்ப கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்துள்ளது.

சிறப்பு பேருந்துகள:

தமிழக போக்குவரத்து துறை ஆனது தொடர் விடுமுறை நாட்கள், பண்டிகை தினங்கள் போன்ற சிறப்பு தினங்களில் மக்கள் அதிக அளவில் பயணிப்பதை முன்னிட்டு மக்களின் வசதிக்காக கூடுதலாக சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்து இயக்கி வருகிறது. இந்நிலையில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் ஆணையம் 100% வாக்குப்பதிவு இலக்கை நோக்கி செயல்படுகிறது. எனவே வெளியூர்களில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க ஏதுவாக தமிழகம்  முழுவதும் சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.

ஏப்ரல் 26ம் தேதி பொது விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!

இதனால் ஏப்ரல் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்கள் தோறும் பயணிக்கும் பயணிகளின் தேவைக்கு ஏற்ப விடிய விடிய பேருந்துகள் இயக்க உள்ளதாகவும், சென்னையில் இருந்து முக்கியமான நகரங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு 2000க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அரசு விரைவு பேருந்துகளில் முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளதால் பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பலனடைய அறிவுறுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!