ரூ.2000 நோட்டுகளை மாற்ற முடியாது – RBI ன் அதிரடி அறிவிப்பு!

0
ரூ.2000 நோட்டுகளை மாற்ற முடியாது - RBI ன் அதிரடி அறிவிப்பு!

முன்னதாக நாட்டில் புழக்கத்தில் இருந்து வந்த ரூபாய் 2000 நோட்டுகளை மாற்றுவது குறித்தான புதிய அறிவிப்பை இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

2000 ரூபாய் நோட்டுகள் மாற்றம்:

2023 ஆம் ஆண்டு மே மாதம் இந்திய ரிசர்வ் வங்கியானது நாட்டில் உயர் மதிப்பு கொண்ட 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்திருந்தது. செப்டம்பர் 31 ஆம் தேதி வரை பொதுமக்கள் அருகில் உள்ள வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களில் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர் எழுந்த கோரிக்கைகளின் அடிப்படையில் டிசம்பர் 31ஆம் தேதி வரை இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை இந்திய ரிசர்வ் வங்கியின் அனைத்து கிளைகளிலும் 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் ஏப்.17 & 18ம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கம் – அரசின் ஏற்பாடு!

தற்போது ஏப்ரல் ஒன்றாம் தேதி அன்று நாடு முழுவதும் உள்ள இந்திய ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் கணக்கு முடிப்பதால் அன்றைய தினம் மட்டும் ரூபாய் 2000 நோட்டுகளை மாற்ற முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானது ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகங்களிலும் பொருந்தும் என்றும் ஏப்ரல் ஒன்றாம் தேதி மட்டும் தற்காலிகமாக நோட்டுகளை மாற்றுவது அல்லது டெபாசிட் செய்வது நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!