100 வேலை திட்டத்தின் ஊதிய உயர்வு அறிவிப்பு – தேர்தல் அதிகாரி விளக்கம்!

0
100 வேலை திட்டத்தின் ஊதிய உயர்வு அறிவிப்பு - தேர்தல் அதிகாரி விளக்கம்!

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.

ஊதிய உயர்வு:

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கிராம புற மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் நோக்கத்தில் நூறு நாட்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்துடன் வேலை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலமாக நாடு முழுவதும் மொத்தம் 5.97 கோடி குடும்பங்கள் பலனடைந்து வருகின்றனர். மாநிலங்களைப் பொறுத்து ஊதிய வரம்பு வெவ்வேறாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை 2023 – 24 ஆம் நிதி ஆண்டில் 100 நாள் வேலை திட்டத்தில் தினசரி ஊதியம் ரூபாய் 294 ஆக இருந்து வருகிறது. சமீபத்தில் மத்திய அரசு 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதிய உயர்வை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமல் படுத்துவதாக அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2024 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

அதன்படி தமிழகத்திற்கு வரும் நிதியாண்டில் தினசரி ஊதியம் ரூபாய் 319 ஆக உயர்த்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியானது. இது குறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு அவர்கள் 100 நாள் வேலை திட்டத்துக்கான ஊதியத்தை உயர்த்துவது தொடர்பாக மத்திய அரசின் அரசாணை குறித்து எந்த தகவலும் தங்களிடம் இல்லை என்றும், ஒருவேளை மத்திய அரசு இதற்கு அனுமதி பெற்று இருக்கலாம் என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!