பாக்கியா வீட்டில் கோபி போட்டோவை பார்த்த ராதிகா, விவரத்தை சொன்ன எழில் – “மகா சங்கமம்” சீரியலில் அடுத்து வருபவை!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” கதாபாத்திரங்களுடன் இணைந்த மகா சங்கமம் எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகிறது. தாத்தாவின் பிறந்தநாளுக்கு ராதிகா வருவாரா அதனால் கோபி மாட்டிக் கொள்வாரா என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.
மகா சங்கமம் எபிசோட்:
தற்போது மகா சங்கமம் சீரியலில், ராமமூர்த்தி தாத்தாவை சந்தோஷப்படுத்த அவருடைய பிறந்தநாளுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை பாக்கியா அழைக்கிறார். அதனால் அனைவரும் சென்னைக்கு வருகின்றனர். ஒரே குடும்பமாக அனைவரும் சந்தோசமாக இருப்பதை பார்க்க நன்றாக இருக்கிறது. மேலும் கண்ணன் கோபியை வெறுப்பேற்றுவதை பார்க்க நகைச்சுவையாக இருக்கிறது. இந்நிலையில் கோபி பாக்கியாவிடம் ராதிகாவை கூப்பிட வேண்டாம் என சொல்கிறார்.
விஜய் டிவியை விட்டு வெளியேறப்போகும் தொகுப்பாளினி ப்ரியங்கா – ப்ரோமோ ரிலீஸ்!
ஆனால் பாக்கியா அதை மீறி ராதிகாவை கூப்பிட செல்கிறார். அப்போது நீங்க திருமணம் செய்ய இருப்பவரையும் கூட்டிக் கொண்டு வாருங்கள் என பாக்கியா சொல்கிறார். அதனால் ராதிகா கோபியை கண்டிப்பாக வர வேண்டும் என சொல்கிறார். ஆனால் கோபி எனக்கு பழக்கம் இல்லாத வீட்டிற்கு எப்படி வர முடியும் என சொல்லி சமாளிக்க, ஆனால் ராதிகா கண்டிப்பாக வர வேண்டும் இல்லை என்றால் நான் பேசவே மாட்டேன் என சொல்கிறார்.
Exams Daily Mobile App Download
அதை கேட்டு கோபிக்கு கோவம் வருகிறது. கோபி ராதிகாவை வரவிடாமல் தடுக்க வேண்டும் என பல வேலைகளை செய்கிறார். ஆனால் அதை எல்லாம் கேட்காமல் கண்டிப்பாக வர வேண்டும் என ராதிகா கோவமாக பேசிவிடுகிறார். கோபி எப்படி தப்பிக்க இருக்கிறார் என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது. மேலும் ராதிகா பாக்கியா வீட்டிற்கு வந்து கோபியின் புகைப்படத்தை பார்த்துவிடுகிறார். பின் எழிலிடம் அது கோபி தான என கேட்க போகிறார். எழிலிற்கு உண்மை எல்லாம் தெரியும் என்பதால் அவர் சொல்லிவிடுவாரா என இனி வரும் எபிசோடுகளில் காட்டப்படும்.