விஜய் டிவியை விட்டு வெளியேறப்போகும் தொகுப்பாளினி ப்ரியங்கா – ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சியில் ஏகப்பட்ட சீசன்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியின் 8வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் அதில் மாகாபா ஆனந்த் சொன்ன ஒரு விஷயத்தால் ப்ரியங்கா விஜய் டிவியை விட்டு போக முடிவு செய்துள்ளார். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி:
சின்னத்திரையில் ஏகப்பட்ட சீரியல்களும், ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால் புதுமையான கன்டென்ட் உடன் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்வதில் விஜய் டிவி சிறப்பு வாய்ந்தது. அந்த வகையில் பல ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சி மூலம் பாடல் திறமை இருக்கும் பலருக்கு பாட வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி மூலமாக சினிமாவில் பிரபலமானவர்கள் பலர் இருக்கின்றனர்.
புது கார் வாங்கிய குஷியில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் மீனா – வைரலாகும் வீடியோ!
பல சீசன்களை கடந்தாலும் மக்களின் விருப்பமான நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி இருக்கிறது. தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 ஒளிபரப்பாகி வருகிறது. அதில் தொகுப்பாளராக மாகாபா ஆனந்த் மற்றும் ப்ரியங்கா இருக்கிறார்கள். இருவரின் கம்போவும் இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இந்நிலையில் இந்த வார நிகழ்ச்சியில் தற்போது உலக இசை திருவிழா என்கிற பெயரில் வெளிநாட்டில் இருந்து கலைஞர்கள் வந்திருக்கிறார்கள்.
Exams Daily Mobile App Download
அவர்களில் மிகா என்ற பெண்ணிடம் மாகாபா ஆனந்த் காமெடியாக பேசுகிறார். அதனால் மாகாபாவிற்கு அந்த பெண்ணை பிடித்து போக இனிமேல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் ஆங்கர் பிரியங்கா தான் என சொல்கிறார். அப்போது அதை எல்லாம் கவனித்த ப்ரியங்கா மாகாபா அப்படியே பேசிக் கொண்டிருங்கள் நான் விஜய் டிவியை விட்டு போகிறேன் என கோவமாக சொல்ல, உடனே மாகாபா சிரிப்பது போல ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.