LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு ஷாக் அறிவிப்பு – அதிரடியாக உயர்ந்த விலை!
கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி கேஸ் சிலிண்டரின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. அந்த வகையில் மே 7 தான் கேஸ் சிலிண்டரின் விலை உயர்ந்த நிலையில் தற்போது மீண்டும் விலை உயரந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சிலிண்டரின் விலை:
சமையல் எரிவாயுவின் விலை அனைத்து நாடுகளிலுமே தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் LPG கேஸ் சிலிண்டர்களின் விலை முறையாக திருத்தப்பட்டு சார்பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டுமே நான்கு முறை சிலிண்டரின் விலை உயந்துள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன் போராலும் பங்குச்சந்தை மிகவும் பாதிப்படைந்துள்ளது. இதன் விளைவால் ஏற்றுமதி, இறக்குமதி அனைத்துமே பாதிக்கப்பட்டுள்ளதால் சிலிண்டர் கேஸ்ஸின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் – கருத்துகள் தவறாக திரிப்பு! விளக்கம் அளித்த பிடிஆர்!
சிலிண்டர் விலை மட்டுமல்லாமல் நாடு முழுவதுமே பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டிருக்கிறது. நாடு முழுவதுமே வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு விலையும், வீட்டிற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயுவின் விலையும் அதிகரித்து கொண்டிருக்கிறது. மே 7 ஆம் தேதி தான் மே வீட்டில் பயன்படுத்தப்படும் சிலிண்டரின் விலை ரூ.50 உயர்த்தப்பட்டது. இதுமட்டுமல்லாமல் 19 கிலோ வர்த்தக சிலிண்டரின் விலை ரூ.250 அதிகரித்து ரூ.2253 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
Exams Daily Mobile App Download
மே மாதத்தில் மட்டுமே இரண்டு முறை LPG கேஸ் சிலிண்டரின் விலை உயரத்தப்பட்டுள்ளது. தற்போது வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 3 ரூபாய் 50 காசுகள் அதிகரித்துள்ளது. எப்போதும் ஆண்டுக்கு ஓரிரு முறை மட்டுமே சமையல் எரிவாயுவின் விலை உயர்த்தப்படும். ஆனால் இம்முறை ஒரே மாதத்தில் மட்டுமே இரண்டு முறை விலை உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 3 ரூபாய் 50 காசுகள் அதிகரித்ததனை ஒட்டி சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 1000 ரூபாயை தாண்டியுள்ளது. டெல்லி மற்றும் மும்பையில் 14.2 கிலோ வீட்டு LPG சிலிண்டர் விலை ரூ.1003 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.1029 ஆகவும், சென்னையில் ரூ.1018.5 ஆகவும் உயர்ந்துள்ளது.