தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் – கருத்துகள் தவறாக திரிப்பு! விளக்கம் அளித்த பிடிஆர்!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் - கருத்துகள் தவறாக திரிப்பு! விளக்கம் அளித்த பிடிஆர்!
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் - கருத்துகள் தவறாக திரிப்பு! விளக்கம் அளித்த பிடிஆர்!
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் – கருத்துகள் தவறாக திரிப்பு! விளக்கம் அளித்த பிடிஆர்!

தமிழகத்தில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் வழங்குவது சாத்தியமில்லை என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றத்தில் அறிவித்ததாக சர்ச்சை கிளம்பியது. இந்நிலையில் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான சர்ச்சைக்கு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் கொடுத்துள்ளார்.

பழைய ஓய்வூதிய திட்டம்

தமிழகத்தில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் கோரி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது திமுக தனது தேர்தல் அறிக்கையில், பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது. தேர்தலில் வெற்றிபெற்று திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு பெற்று உள்ள நிலையில் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

மே 23 முதல் ஜூன் 24 வரை கோடை விடுமுறை அறிவிப்பு – மாநில அரசின் உத்தரவு!

இதனால், பழைய ஓய்வூதிய திட்டம் எப்போது அமல்படுத்தப்படும் என காத்திருந்த அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைத்தது. இதற்கிடையில், சட்டமன்றத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியபோது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாகவும், முதல்வரின் முடிவுக்கு கட்டுப்பட்டு நடவடிக்கை எடுப்பேன் எனவும் தெரிவித்தார். அதற்கு நேர் எதிராக, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமில்லை என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாக ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் செய்திகள் வைரலாகியது.

இந்த செய்தியை கண்டு அரசு ஊழியர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இந்நிலையில், பழைய ஓய்வூதிய திட்டம் பற்றி நிதியமைச்சர் பிடிஆர் விளக்கமளித்துள்ளார். நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மதுரையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, சட்டமன்றத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து நான் என்ன பேசினேன் என்பதையே பார்க்காமல் பலரும் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர், ராஜஸ்தானில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி அடுத்த ஆண்டுக்கு தயாராகி வரும் நிலையில், புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள நிதியை அம்மாநில அரசு கேட்டிருக்கிறது. அப்போது ஒரு புதிய சட்ட சிக்கல் தெரிய வந்திருக்கிறது.

Exams Daily Mobile App Download

ராஜஸ்தான் அரசுக்கு பென்சன் ஒழுங்குமுறை ஆணையம் (PFRDA) அனுப்பியுள்ள கடிதத்தில், தனித்தனி பெயர்களில் இருக்கும் பணத்தை ராஜஸ்தான் அரசு மொத்தமாக கொடுக்கும்படி கேட்பது சட்டத்துக்கு புறம்பானது எனவும், செயல்படுத்த முடியாதது எனவும் தெரிவித்துள்ளது. இதை நான் சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது எழுந்த கேள்விக்கு விளக்கமாக அளித்தேன். இதில் நிதி பற்றி நான் எதுவுமே சொல்லவில்லை, நான் சொல்லாததை சொன்னேன் என்று சில அறிவுஜீவிகள் அறிக்கைகளும், பேட்டியும் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.அவர்கள் கூறுவது முழு கனவு அல்லது முழு பொய் என்று தான் கூற முடியும் என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!