ராதிகாவுடன் மல்லுக்கட்டும் பாக்கியா – நடுவில் மாட்டி தவிக்கும் கோபி! சீரியலில் அடுத்த திருப்பம்!

0
ராதிகாவுடன் மல்லுக்கட்டும் பாக்கியா - நடுவில் மாட்டி தவிக்கும் கோபி! சீரியலில் அடுத்த திருப்பம்!
ராதிகாவுடன் மல்லுக்கட்டும் பாக்கியா - நடுவில் மாட்டி தவிக்கும் கோபி! சீரியலில் அடுத்த திருப்பம்!
ராதிகாவுடன் மல்லுக்கட்டும் பாக்கியா – நடுவில் மாட்டி தவிக்கும் கோபி! சீரியலில் அடுத்த திருப்பம்!

பாக்கியாவை நம்பி குழந்தைகளுக்கு சமைக்க சொன்னால் இவர் நம்மையே காவல் நிலையம் வரை கொண்டுவந்து விட்டாரே என ராதிகா பாக்கியாவிடம் கோவப்படுகிறார். பாக்கியாவும் பதிலுக்கு கோவப்படும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. 100 ஆதரவற்ற குழந்தைகளுக்காக சமைத்து தரும்படி பாக்கியாவிடம் ராதிகா கேட்டிருந்தார். பாக்கியாவும் ஆசையாக தான் குழந்தைகளுக்கு சமைத்து கொடுத்தார். ஆனால், எதிர்பாராத விதமாக பாக்கியா சமைத்து கொடுத்த சாப்பாட்டை சாப்பிட்டு அனைத்து குழந்தைகளும் மயங்கி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் பாக்கியா தான் குழந்தைகளுக்கு கொடுத்த சாப்பாட்டில் நஞ்சை கலந்துவிட்டார் என கூறி பாக்கியாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சின்னத்திரையில் பிரபலமான ஜோடியான ராகவ் ப்ரீத்தா வீட்டில் நடந்த சோகம் – அவரே வெளியிட்ட வீடியோ!

ஆர்டர் கொடுத்தவரையும் விசாரிக்க வேண்டும் என்பதற்காக ராதிகாவையும் போலீசார் காவல் நிலையத்திற்கு கூட்டி சென்றுவிட்டனர். பாக்கியாவை நம்ப வேண்டாம் என கோபி பல முறை கூறியும் நான் தான் கேட்கவில்லை. தற்போது காவல்நிலையத்திற்கு வரும்படி செய்துவிட்டார் என பாக்கியா மீது ராதிகா கொலை வெறியில் இருக்கிறார். பின்பு, பாக்கியா ராதிகாவிடம் பேச சென்ற போது கூட ராதிகா சரியாக பேசவில்லை. பாக்கியாவை விட்டு விலகி செல்ல நினைக்கிறார். இதற்கு நடுவே பாக்கியாவை காப்பாற்ற குடும்பத்தில் உள்ள அனைவருமே கோபிக்கு தொடர்ந்து கால் செய்கின்றனர்.

ராதிகாவை மட்டும் காப்பாற்றி கூட்டி வந்த கோபி – தனியாக தவிக்கும் பாக்கியா! சீரியலில் புதிய திருப்பம்!

ஆனால், கோபி குடும்பத்தில் உள்ள யாரின் காலையும் அட்டென்ட் செய்யவே இல்லை. இதற்கு பிறகு கோபியை நம்பினால் பாக்கியா உள்ளேயே தான் இருக்க வேண்டும். நம்மளே எதாவது செய்தாக வேண்டும் என நினைத்து எழில் தான் பாக்கியா மீது எந்த தவறும் இல்லை என்பதை நிரூபித்து வெளியே கூட்டி வருகிறார். பின்பு, ராதிகாவை மட்டும் கூட்டி செல்ல கோபி அங்கு வருகிறார். அதற்கு பிறகு ராதிகா பாக்கியாவை சந்தித்து உங்களை நம்பியதற்கு நன்றாக செய்துவிட்டீர்கள் என கண்டபடி திட்டுகிறார். பாக்கியா சமையல் விஷயத்தில் மட்டும் எப்போதும் பொறுமையாக இருக்க மாட்டார். இதனால் திருப்பி ராதிகாவுடன் பாக்கியா சண்டை போடும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!