ராதிகாவை மட்டும் காப்பாற்றி கூட்டி வந்த கோபி – தனியாக தவிக்கும் பாக்கியா! சீரியலில் புதிய திருப்பம்!

0
ராதிகாவை மட்டும் காப்பாற்றி கூட்டி வந்த கோபி - தனியாக தவிக்கும் பாக்கியா! சீரியலில் புதிய திருப்பம்!
ராதிகாவை மட்டும் காப்பாற்றி கூட்டி வந்த கோபி - தனியாக தவிக்கும் பாக்கியா! சீரியலில் புதிய திருப்பம்!
ராதிகாவை மட்டும் காப்பாற்றி கூட்டி வந்த கோபி – தனியாக தவிக்கும் பாக்கியா! சீரியலில் புதிய திருப்பம்!

ராதிகாவும், பாக்கியாவும் காவல் நிலையத்தில் இருக்கும் போது கோபி ராதிகாவை மட்டும் தனியாக வெளியே அழைத்து வருகிறார். பின்பு பாக்கியா தனிமரமாக நின்று கொண்டிருக்கும் போது எழில் உண்மையை நிரூபித்து பாக்கியாவை காப்பாற்றும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே மக்களின் மத்தியில் பிரபலமாகி வருகிறது. அந்த வகையில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. பாக்கியா சமைத்து கொடுத்த சாப்பாட்டை சாப்பிட்டு 100 க்கும் மேற்பட்ட குழந்தைகள் மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் போலீசார் பாக்கியாவை கைது செய்துள்ளனர். ஆர்டர் கொடுத்ததால் ராதிகாவையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

கோபியை வீட்டை விட்டு துரத்தும் எழில் – நடு ரோட்டில் கோபி! சீரியலில் அடுத்த திருப்பம்!

வேண்டும்மென்றெ பாக்கியா உணவில் நஞ்சை கலந்துவிட்டார் என நினைத்து பாக்கியாவை ராதிகா கண்டபடி திட்டுகிறார். பாக்கியாவை போலீசார் கைது செய்ததுமே குடும்பத்தில் உள்ள அனைவரும் பதறிப்போய் கோபிக்கு கால் செய்கின்றனர். ஆனால் பாக்கியாவும் ராதிகாவும் காவல் நிலையத்தில் தான் இருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொண்டு கோபி குடும்பத்தில் உள்ள யாரின் காலையும் அட்டென்ட் செய்யவில்லை. யாரின் காலையும் அட்டென்ட் செய்யாத காரணத்தினால் குடும்பமே கோபியின் மீது கோவத்தில் உள்ளனர்.

வெண்பாவை திருமணம் செய்து கொள்ளும் பாரதி – சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!

பின்பு, ராதிகாவை மட்டும் மறைமுகமாக காவல் நிலையத்தில் இருந்து வெளியே எடுக்கிறார். வெளியே வந்ததுமே ராதிகா, பாக்கியாவை கண்டபடி திட்டுகிறார். அதாவது நம்பியதற்கு ஏற்றோர்போல எனக்கு துரோகம் செய்துவிட்டார் என கத்துகிறார். இதற்கு பிறகு எழில் தான் பாக்கியா மீது எந்த தவறும் இல்லை என்பதை நிரூபித்து வெளியே கூட்டி வருகிறார். அனைத்து பிரச்சனைகளுக்கும் பிறகு கோபி எப்படி வீட்டிற்கு செல்வார், குடும்பத்தினர்கள் கோபியை என்ன செய்ய காத்திருக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!