தமிழகத்தில் நாளை (மார்ச் 19) பள்ளிகளுக்கு விடுமுறை – ஞாயிற்றுக்கிழமை செயல்படும்! அரசு அறிவிப்பு!

0
தமிழகத்தில் நாளை (மார்ச் 19) பள்ளிகளுக்கு விடுமுறை - ஞாயிற்றுக்கிழமை செயல்படும்! அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (மார்ச் 19) பள்ளிகளுக்கு விடுமுறை - ஞாயிற்றுக்கிழமை செயல்படும்! அரசு அறிவிப்பு!
 தமிழகத்தில் நாளை (மார்ச் 19) பள்ளிகளுக்கு விடுமுறை – ஞாயிற்றுக்கிழமை செயல்படும்! அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளும் வருகிற ஞாயிற்றுக்கிழமை பள்ளிகள் நடைபெறும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. அதன்படி நாளை சனிக்கிழமை அன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கல்வித்துறை எடுத்துள்ள புதிய முயற்சியில் அனைத்து பள்ளி மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஞாயிறு பள்ளிகள் செயல்படும்:

உலக அளவில் கடந்த 2 வருட காலமாக கொரோனா வைரஸ் பரவலால் நாட்டில் பல மாற்றங்கள் ஏற்பட்டது. அதில் பாதிக்கப்பட்டதில் ஒன்று மாணவர்களின் கல்வியும். 2020 ல் தொடங்கி 2021 வரையிலும் பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்தும் மூடப்பட்டது. அந்த சமயங்களில் மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் எடுக்கப்பட்டது. மேலும் 10, 11, 12 மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடத்தப்படவில்லை மற்றும் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி என்றும் என்பதையும் அரசு அறிவித்தது.

மாநில அரசு ஊழியர்களுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிப்பு – முதலமைச்சர் உத்தரவு!

பின்னர் தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைய குறைய கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டன. இதனால் கடந்த பிப்ரவரி மாதம் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டது. அடுத்த கட்ட நடவடிக்கையாக தேர்வுகளுக்காக அடிப்படை தகவல்கள் படிப்படியாக வெளியாகியது. இந்நிலையில் தேர்வுகள் வரவிருக்கும் நிலையில் பாடங்களை முடிந்த அளவுக்கு விரைவில் நிறைவு செய்ய அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் நடைபெற வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

Reliance Jio, Airtel வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் – சூப்பர் ரீசார்ஜ் திட்டங்கள்! முழு விவரம் இதோ!

அதை தொடர்ந்து நாளை மார்ச் 19 சனிக்கிழமை அன்று அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் விடுமுறை அளித்து அதற்கு பதிலாக மார்ச் 20 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மாணவர்களின் பெற்றோர்களுக்கு பள்ளி மேலாண்மை குழு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் மொத்தமாக 52 லட்சம் குழந்தைகளின் பெற்றோர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அன்று ஒரு நாள் பள்ளிக்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!