கடை வசூலை கொடுக்கும் ஜனார்த்தனன், குடும்பத்தை நினைத்து கவலையில் ஜீவா – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ எபிசோடு!

0
கடை வசூலை கொடுக்கும் ஜனார்த்தனன், குடும்பத்தை நினைத்து கவலையில் ஜீவா - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' எபிசோடு!
கடை வசூலை கொடுக்கும் ஜனார்த்தனன், குடும்பத்தை நினைத்து கவலையில் ஜீவா - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' எபிசோடு!
கடை வசூலை கொடுக்கும் ஜனார்த்தனன், குடும்பத்தை நினைத்து கவலையில் ஜீவா – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ எபிசோடு!

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் கடை வசூலை மொத்தமாக ஜீவாவிடம் ஒப்படைக்கிறார் ஜனார்தனனன். பிறகு, வீட்டில் இல்லாத சமயத்தில் தன்னை யாரும் தேடவில்லை என்பதை கேட்டு மனம் வருந்துகிறார் ஜீவா.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

கடந்த சில எபிசோடுகளாக புது வீடு கட்டுவதற்கு ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தினர் திட்டமிட்டு வரும் நிலையில், இப்போது ஒரு புதிய இடத்தை பார்க்க வந்துள்ளனர். அப்போது இடம் வாங்குவதற்கு சில விஷயங்களையெல்லாம் பார்த்து செய்ய வேண்டும் என்று முருகன், மூர்த்தி மற்றும் கதிருக்கு ஆலோசனைகளை சொல்கிறார். மறுபக்கத்தில் கல்லூரி முடித்து வீட்டுக்கு வரும் கண்ணன் பாட்டு பாடிக்கொண்டு உற்சாகமாக வர, காலேஜில் ஒழுங்கா படிக்கிறியா, பொண்ணுங்க கிட்ட பேசுறியா என்று கேள்வி கேட்டு அண்ணிகள் அனைவரும் அவரை கிண்டல் செய்கின்றனர்.

ஹேமாவை வெறுக்கும் லட்சுமி, காரணம் தெரியாமல் குழப்பத்தில் கண்ணம்மா – இன்றைய எபிசோடு!

பிறகு காலேஜுக்கு எக்ஸாம் ஃபீஸ் கட்டனும், அண்ணனிடம் பணம் கேட்க ஒரு மாதிரியாக இருக்கிறது என்று ஐஸ்வர்யாவிடம் கூறி வருந்துகிறார் கண்ணன். மறுபக்கத்தில், கடை வேலைகளை எல்லாம் முடித்து விட்டு ஜனார்த்தனன் வீட்டுக்கு வரும் ஜீவாவிடம் கடை பிசினஸ் எப்படி இருந்தது என்று கேட்டு விட்டு அவரை பாராட்டுகிறார். தொடர்ந்து அன்றைய நாளுக்கான வசூலை ஜீவா, ஜனார்தனனிடம் ஒப்படைக்க அந்த பணத்தை அவரையே வைத்து கொள்ளும் படி சொல்கிறார் ஜனார்த்தனன். அந்த பணத்தை வீட்டுக்கு எடுத்து கொண்டு வரும் ஜீவாவிடம், நீ இத்தனை வருஷமா இந்த வீட்டுக்கு வேலை செய்து கொண்டிருக்கிறாய்.

இந்த வீட்டில் இருப்பவர்கள் உனக்கு ஒரு நாளாவது பணம் கொடுத்திருப்பார்களா என்று மீனா ஆதங்கப்படுகிறார். ஆனால், இந்த பணத்தை வைத்து என்ன செய்வது, நமக்கு என்ன தேவை இருக்கிறது, அதை எடுத்து கொண்டு போய் அண்ணனிடம் கொடுக்கவா என்று ஜீவா கேட்க, நமக்கு செலவு இல்லையா. இது நம்ம பணம் எங்க அப்பா கொடுத்தது என்று அதை எடுத்து போய் பீரோவில் வைக்கிறார் மீனா. மேலும், இந்த பண விஷயத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம் எனவும் கூறி விடுகிறார் மீனா.

சன் டிவி ‘கயல்’ சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி நடுரோட்டில் செய்த சம்பவம் – வைரலாகும் வீடியோ!

இப்போது அனைவரும் குடும்பமாக சாப்பிட உட்காரும் போது, ஜீவா சரியாக சாப்பிடுவதில்லை என்று மீனா கோபித்து கொள்ள நீ சும்மா சும்மா இங்க வர வேண்டிய அவசியம் இல்லை என்று தனம் கூறுகிறார். ஆனால், நான் நாளைக்கு நம்ம கடைக்கு வந்து விடுவேன். என் உதவி உங்களுக்கு தேவை இல்லையா என்று ஜீவா கேட்க நீ என்ன ஸ்கூலுக்கு செல்லும் குழந்தையா? 2 தெரு தள்ளி தான் கடை இருக்கிறது. உன் வேலையே ஐஸ்வர்யா செய்கிறாள். கதிர் அண்ணன் மற்ற வேலைகளை செய்கிறார். உன்னை வீட்டில் யாரும் மிஸ் பண்ணவில்லை என்று கண்ணன் கிண்டலாக கூற ஜீவாவின் முகம் வாடிப்போகிறது. இதனுடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!