மாநில அரசு ஊழியர்களுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிப்பு – முதலமைச்சர் உத்தரவு!
ஹோலி பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக முதலமைச்சர் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக ஒரு நாள் மட்டுமே விடுமுறை அளிக்கப்படும் நிலையில் இம்முறை அது இரண்டு நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை அறிவிப்பு:
இந்தியாவில் வருடந்தோறும் ஹோலி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. தற்போது தொற்று பாதிப்பு குறைந்து உள்ளதால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பி உள்ளது. இந்த நிலையில் பண்டிகைகளை கொண்டாடவும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அனுமதி வழங்கி உள்ளது. முன்னதாக உ.பி.யில் ஹோலி பண்டிகைக்கு ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பண்டிகையை முன்னிட்டு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மார்ச் 22 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – அரசு அறிவிப்பு!
ஹோலி பண்டிகையை முன்னிட்டு உத்தரப் பிரதேச அரசு இரண்டு நாள் விடுமுறையை அறிவித்துள்ளது. அதாவது மார்ச் 18, 19 ஆகிய தேதிகளில் ஹோலி திருவிழாவின் அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாகும். யோகி ஆதித்யநாத் தலைமையிலான உ.பி., அரசு, மார்ச் 18ம் தேதியுடன் சேர்த்து, மார்ச் 19ம் தேதி ஹோலி கொண்டாடப்படும், எனவே இரண்டு நாட்களும் விடுமுறையாக இருக்கும் என கூறியுள்ளது.
ரூ. 35,000/- ஊதியத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !
முன்னதாக உ.பி.யில் ஹோலி பண்டிகைக்கு ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பண்டிகையை முன்னிட்டு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருவிழாவின் போது பணியில் இருப்பதற்காக அனைத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் விடுமுறை மார்ச் 16 முதல் 20 வரை ரத்து செய்யப்படும் என்று மூத்த காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். உத்தரப்பிரதேசத்தில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரப் பிரதேச காவல்துறை இயக்குநர் ஜெனரல் (டிஜிபி) முகுல் கோயல் உத்தரவிட்டுள்ளார்.