சென்னைவாசிகளே ‘அலெர்ட்’ – கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விடுமுறை! உள்ளாட்சி தேர்தல் எதிரொலி!
தமிழகத்தில் நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பொது விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இந்த வகையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நாளை விடுமுறை அளித்த நிலையில், இன்று காய்கறிகள் வாங்க வியாபாரிகள் கூட்டம் அதிகரித்தது.
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நாளை விடுமுறை:
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என, 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக நாளை (19ம் தேதி) தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தல் குறித்த அறிவிப்பு கடந்த மாதம் 26ம் தேதி வெளியானது. மேலும் நேற்றுடன் தேர்தல் பிரச்சார பணிகள் முடிந்தது. தேர்தலை முன்னிட்டு நாளை மாநிலம் முழுவதும் பொது விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் அதிகம் இருக்கும் பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் தேர்தல் தினத்தன்று (பிப்.19) பொது விடுமுறை – விதிமீறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை!
இந்த தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து தேர்தல் நடக்கும் பகுதிகளில் உள்ள நிறுவன பணியளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு நாளை அளிக்கப்பட்டு உள்ளது. இந்த வகையில் மதுபான கடைகள் திறக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் தேர்தலை முன்னிட்டு, நாளை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் நள்ளிரவு முதல் சந்தைக்கு வரும் சில்லரை வியாபாரிகள் மற்றும் காய்கறி கடைக்காரர் அதிகம் வருகின்றனர்.
இந்திய IT நிறுவன ஊழியர்களுக்கு ஜாக்பாட் – இந்த ஆண்டில் 9.9% சம்பள உயர்வு! முழு விவரம் இதோ!
மேலும் காய்கறி கடைகளில் வெகு வேகமாக விற்பனை நடைபெற்று வருகிறது. கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள் எண்ணிக்கை அதிகரிப்பதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மேலும் தக்காளி, கத்திரிக்காய், கேரட் உள்ளிட்டவை அதிகாலையில் விற்று தீர்ந்தது. ஆனாலும் காய்கறி விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.