தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்? தேர்தலுக்கு பின் வெளியாகும் அறிவிப்பு!
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு மீண்டும் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் அமலாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஊரடங்கு:
தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கொரோனா மூன்றாம் அலை பாதிப்பு காரணமாக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்தது. மீண்டும் கட்டுக்கடங்காமல் பரவி வரும் வைரஸ் தொற்றை தடுக்கும் முயற்சியாக அரசு இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு கிழமைகளில் முழு ஊரடங்கு என்று பல கட்டுப்பாடுகளை விதித்தது. மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. இதன் விளைவாக கொரோனா தொற்று சற்று குறைய ஆரம்பித்தது. அதனால் இரவு நேர ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு ரத்து செய்யப்பட்டு தளர்வுகள் அளிக்கப்பட்டது.
சென்னைவாசிகளே ‘அலெர்ட்’ – கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விடுமுறை! உள்ளாட்சி தேர்தல் எதிரொலி!
இதனையடுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டது. இந்த நேரத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை கருத்தில் கொண்டே, ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அரசியல் கட்சியினர் பல்வேறு விமர்சனங்களை முன் வந்தனர். தேர்தலை முன்னிட்டு மக்கள் கூட்டம் கூட வாய்ப்புள்ளது. இதனால் மேலும் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும். தற்போது ஆப்ரிக்க நாட்டில் நியோகோவ் என்ற புதிய வைரஸ் மற்றும் திரிபான பிஏ 2 வைரஸ் தொற்றும் கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தேர்தல் தினத்தன்று (பிப்.19) பொது விடுமுறை – விதிமீறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை!
இந்த வைரஸ் தொற்று மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது நடைபெறும் தேர்தல் பிரச்சாரங்களில் பொதுக் கூட்டங்களில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படவில்லை. தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு கொரோனா பாதிப்பு அதிகரிக்கலாம் பிறகு மீண்டும் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் அமலாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.