தமிழகத்தில் தேர்தல் தினத்தன்று (பிப்.19) பொது விடுமுறை – விதிமீறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை!

0
தமிழகத்தில் தேர்தல் தினத்தன்று (பிப்.19) பொது விடுமுறை - விதிமீறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை!
தமிழகத்தில் தேர்தல் தினத்தன்று (பிப்.19) பொது விடுமுறை - விதிமீறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை!
தமிழகத்தில் தேர்தல் தினத்தன்று (பிப்.19) பொது விடுமுறை – விதிமீறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை!

தமிழகத்தில் வருகிற 19ம் தேதி அன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் தேர்தலை முன்னிட்டு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தேர்தல் தினத்தில் விடுமுறை அளிக்கப்படாத நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பொது விடுமுறை

தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திற்கும் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை வருகிற 19ம் தேதி அன்று நடத்த உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான முடிவுகள் வருகிற 22ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு அதன்பின்பு முடிவுகள் அறிவிக்கப்படும்.

தமிழக ரேஷன் கடைகளில் 3,803 காலிப்பணியிடங்கள் – வேலைவாய்ப்பு அறிவிப்பு!

இதனை தொடர்ந்து வாக்குரிமை உள்ள அனைவரும் தேர்தல் தினத்தில் வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் நாள் அன்று பொது விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அத்துடன் இந்த அறிவிப்பானது தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920 பிரிவு 43 பி.பி. என்பதன் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் உள்ள தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள், ஐ.டி. நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தோட்ட நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் கடைகள் உள்ளிட்ட இடங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்.

இந்திய IT நிறுவன ஊழியர்களுக்கு ஜாக்பாட் – இந்த ஆண்டில் 9.9% சம்பள உயர்வு! முழு விவரம் இதோ!

மேலும் இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் காளிதாஸ் அவர்கள் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பில் தெரிவித்ததாவது, தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை 19ம் தேதி அன்று திறக்கப்பட உள்ளது. அத்துடன் மாவட்டத்தில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்காத நிறுவனங்கள் பற்றிய புகார்களை தெரிவிக்க 8807429192, 04562 252130 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!