குழந்தை இருந்தால் இனி வேலை இல்லை.. எக்குத்தப்பான அறிவிப்பை வெளியிட்ட Infosys – நீதிமன்றத்தில் வழக்கு!
பிரபல ஐடி நிறுவனத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதாக வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு கோர்ட் வழங்கும் தீர்ப்பு குறித்து கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
Infosys நிறுவனம்:
உலகம் முழுவதும் பொருளாதார பெரும் மந்தநிலை காரணமாகவும் மற்றும் பண வீக்கத்தின் காரணமாகவும் ஐடி நிறுவனங்கள் பெரும் சரிவை சந்தித்து வருகின்றனர். அதனால் பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் தங்களின் வளர்ச்சியை மேம்படுத்த ஊழியர்களை பல்வேறு காரணங்களுக்காக பணி நீக்கம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் வயது, பாலினம் மற்றும் தேசியம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு நடைபெறுவதாக இன்போசிஸ் நிறுவனம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இன்போசிஸ் நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு நிகழ்வானது வயது, பாலினம் மற்றும் தேசியம் ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களை தேர்வு செய்து பணி நியமனம் செய்யப்படுவதாக புகார் அளித்துள்ளார். அத்துடன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள், குழந்தைகளை பெற்றெடுத்த பெண்கள், 50 வயதுக்கு மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் உள்ளிட்டவர்களை இந்நிறுவனம் பணியில் அமர்த்த தடை விதித்துள்ளது. இதனை உடனடியாக தளர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
ஆனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என Infosys நிறுவனம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. மேலும் மேற்கண்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரத்துடன் நிரூபிக்கப்படவில்லை என்பதால் இந்த வழக்கை உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. இதற்கு கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளதாவது, இந்த மனுவை தள்ளுபடி செய்ய நிராகரித்துள்ளது. அத்துடன் இந்த வழக்கு குறித்து மேலும் 21 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என இன்போசிஸ் நிறுவனத்திற்கு கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்