தமிழக விவசாயிகளுக்கான 100 நாள் வேலை திட்டத்தில் மாற்றம் – வலுக்கும் கோரிக்கை!
இந்தியாவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் கிராமப்புற மக்களுக்கு 100 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக விவசாய தொழிலாளர்கள் 100 நாட்கள் வேலை திட்டத்தில் வேலை நாட்களை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
100 நாள் வேலை திட்டம்:
இந்தியாவில் ஏழை மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் நோக்கில் கடந்த 2005ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் ஒரு நிதியாண்டில் 100 நாட்களுக்கு உடல் உழைப்பு சார்ந்த வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மூலம் வேலை பெற்று அதன் மூலம் வருவாய் ஈட்டி வருகின்றனர். கடந்த பரவிய கொரோனா பெருந்தொற்று காலத்திலும் 100 வேலை திட்டத்தில் கிராமப்புற மக்களுக்கு வேலை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த 100 நாள் வேலை திட்டத்தில் மாற்று திறனாளிகளுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவமான வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கு 2 கி.மீ தூரத்திற்குள்ளான வேலைகள் வழங்கப்படும். வேலைக்கான ஊதியம் 15 நாட்களுக்குள் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு பெரும் வரவேற்பை பெற்றது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை நாட்களை 150 ஆக கோரிக்கைகள் எழுந்துள்ளது.கோரி நீடாமங்கலத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் ஈடுபட்ட உறுப்பினர்கள் வேலையோ நாட்களை உயர்த்த வேண்டும்.மேலும் நூறு நாள் வேலை செய்யும் நேரத்தை 9 மணி என திருத்தி அட்டை வைத்துள்ள அனைவருக்கும் 100 நாள் வேலையை வழங்க வேண்டும் என கோரி முழக்கமிட்டனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்