தமிழக ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு குறித்த முக்கிய அறிவிப்பு – பணிகள் தீவிரம்!
தமிழகத்தில் தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு பொங்கல் பரிசு பொருட்களை தமிழக அரசு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்க உள்ளது. இது குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை அரசு அறிவித்துள்ளது.
பொங்கல் பரிசு
தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு பொங்கல் பரிசு பொருட்களை ஆண்டுதோறும் தமிழக அரசு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்கி வருகிறது. நடப்பாண்டில் தமிழகத்தில் உள்ள பொங்கலுக்கு தேவையான பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்புபானது மஞ்ச பைகளில் வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த மஞ்சப்பை 15 அங்குல அகலமும், 18 அங்குல உயரமும் கொண்டது. இது சுமாா் 15 கிலோ வரையில் தாங்கும் வகையில் தயாரிக்கப்பட உள்ளது. இந்த பை மொத்தமான காடா துணிகள், கஞ்சி போடப்பட்டு பின் இயந்திரம் மூலம் வெட்டப்படுகிறது
தமிழகத்தில் இத்துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – முழு விபரம் இதோ!
அதன் பின் அதில் வாசகங்கள், படங்கள் போன்றவை நவீன இயந்திரங்கள் மூலமாக அச்சிடப்படுகிறது. அதையடுத்து முகவா்கள் மூலமாக தைக்க அனுப்பி வைக்கப்படுகிறது. ஒரு பைக்கு தையல் கூலியாக ரூ. 3.50 வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு தைக்கப்பட்ட பைகள் அனைத்தும் தனியாா் நிறுவனம் மூலமாக சேகரிக்கப்படுகிறது. இதையடுத்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்களுக்குத் அனுப்பி வைக்கப்படும். வருகிற ஜனவரி 3ஆம் தேதி முதல் இந்த பொங்கல் தொகுப்புகள் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்!
இதனால் குறைந்த நாட்களே உள்ளதால் பைகளை உற்பத்தி செய்யும் பணிகள் பவானியில் தீவிரமாக நடைபெற்று கொண்டு வருகிறது. இங்கு 18க்கும் அதிகமான இடங்களில் நவீன இயந்திரங்கள் மூலம் அச்சிடும் பணி நடைபெறுகிறது. அத்துடன் 20க்கும் அதிகமான இடங்களில் இந்த பைகளை வெட்டும் பணிகளும் நடைபெறுகிறது. மேலும் 90க்கும் அதிகமான குழுக்கள் மூலம் தையல் தொழிலாளா்கள் கொண்டு தைக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெறுகிறது. மேலும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பைகளை உற்பத்தி செய்யும் பணி மிகவும் தீவிரமாக நடைபெறுகிறது.