தமிழகத்தில் இத்துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – முழு விபரம் இதோ!
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளதை அடுத்து டாஸ்மாக் கடைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் திறக்கப்பட்டது. தற்போது டாஸ்மாக் ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஊதிய உயர்வு
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளதை அடுத்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து டாஸ்மாக் கடைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் போன்றவற்றை திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் 4000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. மேலும் டாஸ்மாக் கடைகளில் தொகுப்பூதிய அடிப்படையில் மொத்தம் 25,009 பேர் பணியாற்றி வருகின்றனர். இதில் 6,761 மேற்பார்வையாளர்களும், 15,090 விற்பனையாளர்களும் மற்றும் 3,158 உதவி விற்பனையாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்!
அத்துடன் தற்போது டாஸ்மாக் ஊழியர்களுக்கு வருகிற ஏப்ரல் 1ம் தேதி முதல் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை தெரிவித்துள்ளது. மேலும் சட்டப்பேரவையில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாத ஊதியம் ரூ.500 உயர்த்தி வழங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி கடை மேற்பார்வையாளர்களின் ஊதியம் தற்போது ரூ.12,750 என வழங்கப்படுகிறது. இதனை ரூ.13,250 ஆக உயர்த்தி தருவதாக தெரிவித்துள்ளது.
மத்திய அரசு வழங்கும் ரூ.2000 – பிரதமரின் கிசான் திட்டம்! முக்கிய அறிவிப்பு வெளியீடு!
இதையடுத்து விற்பனையாளர்களின் ஊதியம் தற்போது ரூ.10,600 என உள்ளது இதனை ரூ.11,100 ஆக உயர்த்தி தரப்படும் எனவும் உதவி விற்பனையாளர்களின் ஊதியம் ரூ.9,500ல் உள்ள நிலையில் ரூ.10,000 ஆகவும் உயர்த்தப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இதில் விபத்து காயம், மருத்துவ காப்பீடு, குடும்ப நல நிதிக்கு பிடித்தங்கள் செய்யப்படும். அதன்படி கடை மேற்பார்வையாளர்களுக்கு பிடித்தங்கள் போக ரூ.11,400 எனவும், விற்பனையாளர்களுக்கு பிடித்தங்கள் போக ரூ.9,508 எனவும், உதவி விற்பனையாளர்களுக்கு பிடித்தங்கள் போக ரூ.8540 எனவும் வழங்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது