விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – ரசிகர்கள் பாராட்டு!
விஜய் டிவியில் ஒளிபரப்பவும் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது வெளியாகியுள்ள புரோமோ மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ப்ரோமோவில் மாணவர்களுக்கு நடைபெறும் பாலியல் பிரச்சினை குறித்து பேசப்பட்டுள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் இல்லத்தரசியின் கதையாக உள்ளது. படிக்காத பெண்ணாக வரும் பாக்கியலட்சுமியின் போராட்டங்களும் அவர் சாதிக்க நினைக்கும் விஷயங்களும் பெண்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது. மேலும் இந்த சீரியலில் வரும் எழில் கதாபாத்திரம் மக்களை கவர்ந்துள்ளது. அவர் தன் அம்மாவிற்கு செய்யும் உதவிகளும், அவரது வேலைக்கு உறுதுணையாக இருப்பதும் தற்போது உள்ள இளைஞர்களுக்கு பாடமாக உள்ளது. இப்படி பல்வேறு விஷயங்களை மக்களுக்கு சொல்லி வரும் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது பள்ளி மாணவர்களுக்கு நடந்து வரும் பாலியல் தொந்தவர்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.
திருமணத்திற்கு பின் Strict ஆன ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஐஸ்வர்யா வைஷாலி – வைரலாகும் வீடியோ!
அண்மையில் தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மூலம் பாலியல் துன்புறுத்துக்கள் அரங்கேறி வருகிறது. சமீபத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தலால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் இனியாவுக்கும், அவருடைய தோழிகளுக்கும் ஒரு ஆசிரியர் சில மோசமான தொந்தரவுகளை கொடுக்கிறார்.
பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகியிருக்கும் நடிகர் அருண் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!
இதனால் இனியாவின் தோழி ஒருவர் கடுமையாக பாதிக்கப்படுகிறார். இதை இனியா வீட்டில் சொல்ல முடியாமல் திணறுகிறாள். இந்த நிலையில் இனியாவின் தோழி நிகிலா தற்கொலை செய்து கொள்வது போல காட்சிகள் இடம் பெறுகிறது. இதனை அறிந்த இனியா வீட்டில் சொல்லி அழுகிறாள். இந்த ப்ரோமோ பார்த்த மக்கள் பலரும் பள்ளி மாணவர்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்த சீரியல் சமூக பிரச்சனை குறித்து பேசியுள்ளதால் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.