பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகியிருக்கும் நடிகர் அருண் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!
பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் அதிக பிரபலமடைந்துள்ள நடிகர் அருண் ,தற்போது சீரியலில் இருந்து விலகி சுற்றுலா சென்றுள்ளார். இதனை அறிந்த பாரதியின் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.
நடிகர் அருண்:
விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தொடர் தான் சின்னத்திரையின் ஹாட் டாபிக் ஆக இருந்து வருகிறது. இந்த தொடரின் ரேட்டிங்கை முந்துவதற்காக பல தொடர்களும் போட்டி போட்டு வரும் நிலையில், அது வெறும் எட்டா கனியாக தான் உள்ளது. சீரியலில் அடுத்தடுத்து வரும் மாற்றங்களும், கதையின் போக்கும் தொடர்ந்து முன்னணியில் இருந்து வர முக்கிய காரணமாக இருந்து வருகிறது. தொடரில் நடிக்கும் அனைத்து பிரபலங்களும் அதிக பிரபலமடைந்து உள்ளனர்.
புது கண்ணம்மா வினுஷாவை பார்த்து பயந்த சீரியல் இயக்குனர் – ‘பாரதி கண்ணம்மா’ பென்னட் ஓபன் டாக்!
பாரதி கண்ணம்மா தொடரில் தான் முதன் முதலில் கதையின் நாயகன் பாரதி வேடத்தில் நடிக்கும் அருண் சின்னத்திரைக்கு அறிமுகம் ஆனார். முன்னதாக அருண் பல குறும்படங்கள் மற்றும் வெள்ளித்திரையில் ஒரு சில கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார். இதன் மூலம் தான் பாரதி கண்ணம்மா வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இந்த தொடரில் நடிக்க தொடங்கிய ஆரம்பத்திலேயே அருண் மக்கள் மனதில் கவனத்தை பெற்று விட்டார். கண்ணம்மாவை சந்தேகப்பட்டு சண்டை போடும் சமயங்களில் மக்கள் இவரை திட்டி தீர்த்து விட்டனர், அது தனது கதாபாத்திரத்திற்கு கிடைத்த வெற்றி என்று கூறிவந்தார்.
‘பாரதி கண்ணம்மா’ சீரியலை விட்டு விலகிய காரணத்தை ஒத்துக் கொண்ட அகிலன் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!
தற்போது பாரதியும், கண்ணம்மாவும் பல வருடங்கள் கழித்து மீண்டும் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இதனால் கதை மிகவும் சுவாரஸ்யமாக சென்று வருகிறது. இந்நிலையில், அருண் தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து சற்று விலகி ஓய்வு எடுத்து வருகிறார். அவர் வட மாநிலங்களில் சென்று எடுத்துக் கொண்ட வீடியோக்கள் தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. அதில், அருண் மிகவும் ஆடி, பாடி மகிழ்ச்சியாக இருப்பது போல் உள்ளது. அருண் பிரேக் எடுத்துள்ள விஷயத்தை அறிந்த ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் இது ஒரு சிறிய விடுமுறை தான் என்பது போல் அவரது பதிவுகள் உள்ளது.