‘பாரதி கண்ணம்மா’ சீரியலை விட்டு விலகிய காரணத்தை ஒத்துக் கொண்ட அகிலன் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!
விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தொடரில் முதலில் அகிலனாக நடித்து வந்த நடிகர் அகில் தற்போது அளித்துள்ள பேட்டியில் தான் ஏன் சீரியலை விட்டு வெளியே வந்தேன் என்ற காரணத்தை கூறியுள்ளார். இந்த காரணத்தை கேட்ட ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியில் உள்ளனர்.
அகிலன் & அஞ்சலி:
பாரதி கண்ணம்மா தொடரில் முதலில் அஞ்சலி தான் பாரதியை காதலிப்பார். ஆனால் சௌந்தர்யா அகிலனுக்கு அஞ்சலியை திருமணம் செய்து விடுவார். இதனால் அஞ்சலி அகிலனை பிடிக்காமல் திருமணம் செய்து கொண்ட வருத்தத்தில் பல வில்லத்தனங்களை செய்து வந்தார். கண்ணம்மாவை பாரதி திருமணம் செய்து கொள்வதை அஞ்சலி தடுக்க நிறைய முயற்சிகளை செய்\தார். ஆனால் வருடம் செல்ல செல்ல அகிலன் காட்டிய பாசத்தினால் அஞ்சலி மனம் மாறி விடுவார். இதனால் இவர்கள் இருவரின் ஜோடிக்கு என்று தனியாக ரசிகர்கள் கூட்டம் சேர்ந்தது.
பிரசவத்திற்கு பின் சர்ச்சை பாடலுக்கு ஆடியுள்ள ‘பாரதி கண்ணம்மா’ வெண்பா – ரசிகர்கள் உற்சாகம்!
இந்நிலையில், பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து அகிலன் திடீரென்று விலகி விட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அகிலன் அஞ்சலி ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில், தற்போது இந்த ஜோடி சேர்ந்து ஹோரா என்ற ஆல்பம் பாடலை வெளியிட்டுள்ளனர். அதில், இவர்களின் ஜோடி மற்றும் பாடல் குறித்து பலரும் புகழ்ந்து வருகின்றனர். இதனால் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஒரு யூடூயூப் சேனலில் இவர்கள் இருவரையும் சேர்த்து பேட்டி எடுத்துள்ளனர். அதில், அகிலன் மற்றும் அஞ்சலி இருவரும் பல தகவல்களை கூறியுள்ளனர்.
மீண்டும் இணைந்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் அகிலன் & அஞ்சலி – மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
அதில், ஏன் சீரியலை விட்டு விலகினீர்கள் என்று கேட்டதற்கு நான், யாருக்கும் துரோகம் பண்ணல, எனக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தது. இதனால் தான் நான் சீரியலை விட்டு விலகினேன். நான் ஹீரோவாக இருந்திருந்தால் விலகி இருக்க மாட்டேன். ஒரு சின்ன தம்பி ரோல் தான் எனக்கு கிடைத்தது. அதை நான் முடிந்த அளவிற்கு செய்துள்ளேன். ஆனால் அது மட்டும் போதாது, ரசிகர்களை மகிழ்விக்கவும், எனது கனவை அடையவும் தான் இந்த முடிவு எடுத்தேன். நான் முக்கியமான கதாபாத்திரமாக இருந்திருந்தால் அவர்களும் என்னை விட்டிருக்க மாட்டார்கள். நான் செய்தது அந்த அளவு முக்கியமான கதாபாத்திரம் இல்லை என்று கூறியுள்ளார்.