தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் கவனத்திற்கு – அரசு முக்கிய தகவல்!
நாடு முழுவதும் கொரோனா தொற்று தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் தடுப்பூசி போட்டு வருகின்றனர். இந்நிலையில் தடுப்பூசி போடாதவர்களால் தான் கொரோனா உருமாற்றம் அடைவதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.
முக்கிய தகவல்:
தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 31,536 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஆண்கள் 23 பேரும், பெண்கள் 29 பேரும் உட்பட மொத்தம் 52 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாட்டில் இருந்தாலும், வெளிநாடுகளில் பரவல் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் மக்கள் பொது இடங்களில் தொடர்ந்து முகக் கவசம் அணியவும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும், தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசு வலியுறுத்தி இருந்தது.
ராமநாதபுரத்தில் நாளை (மார்ச் 23) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இந்த கட்டுப்பாடு தளர்வுகள் இம்மாதம் இறுதி வரையில் நடைமுறையில் இருக்கும். இந்த சூழலில், முதல்வர் கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார். இதன் அடிப்படையில் புதிய கட்டுப்பாடுகள் அல்லது தளர்வுகள் குறித்த அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தடுப்பூசிகள் அனைத்து நாடுகளிலும் உள்ள மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த தடுப்பூசிகள் குறித்து சிலருக்கு சந்தேகங்கள் உள்ளன. இதனால் சிலர் தடுப்பூசி போடாமல் உள்ளனர்.
கொரோனாவை தடுக்க தடுப்பூசி செலுத்துவது கட்டாயம் என பல மாநில அரசுகள் அறிவித்திருப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணை வந்தது. இதில், தமிழக அரசுத் தரப்பில் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களால் தான் கொரோனா உருமாற்றம் அடைந்து கொண்டு வருவதாக நிபுணர்கள் ஆய்வு செய்து தெரிவித்துள்ளனர். எனவே, மத்திய அரசு கூறியதை அடுத்து தமிழகத்தில் 100 சதவிகித மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மாநில அரசு எடுத்து வருகிறது எனத் தெரிவித்துள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கம் குறைந்து வருவதாகவும் குறிப்பிட்டு உள்ளது.