ராமநாதபுரத்தில் நாளை (மார்ச் 23) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை(மார்ச் 23) காலை 10 மணி முதல் மதியம் 2 வரை பராமரிப்பு பணிகள் நடக்க இருப்பதால் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்பட இருப்பதாக மின் வாரியம் சார்பில் அறிவித்து உள்ளனர்.
மின்தடை:
தமிழ்நாட்டில் மின் பராமரிப்பு பணிகள் மற்றும் பெரிதாக வளர்ந்து தொங்கும் பெரிய மரங்களில் சிக்கி சிரமத்தை ஏற்படுத்தும் தேவை இல்லாத மின்கம்பிகளை அகற்றுவதற்காகவும் மின் வாரியத்தின் சார்பில் பராமரிப்பு பணிகள் மாதந்தோறும் நடத்தி வருகிறது. மேலும் இவ்வாறு பணிகளை மேற்கொள்ளும் போது மாவட்டங்களில் உள்ள துணை மின் நிலையங்களுக்கு அப்பாற்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும். பொதுவாக மின்தடை குறைந்தபட்சம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இருக்கும். அதிகபட்சமாக காலை 9 மணி முதல் 6 மணி வரை இருக்கும். இந்த மின்தடை ஆனது ஒவ்வொரு குறிப்பிட்ட பகுதிகளுக்கும் மாதத்தில் ஒரு முறை செய்யப்பட்டு வருகிறது.
இந்திய 100, 200 ரூபாய் நோட்டுகளில் உள்ள சாய்வான கோடுகள் – காரணம் என்ன தெரியுமா?
இந்நிலையில் தற்போது ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை(மார்ச் 23) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மண்டபம் பகுதியை சுற்றியுள்ள இடங்களில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்பகிர்மானக்கழக ராமநாதபுரம் உதவி செயற்பொறியாளர் சி. செந்தில்குமார் தெரிவித்து உள்ளார்.
மண்டபம் பகுதியில் மின் தடை ஏற்பட உள்ள பகுதிகள், மண்டபம் மறவர் தெரு, சிங்காரத்தோப்பு, ஜமீன் சத்திரம், இந்திரா நகர், காந்திநகர், மீனவர் காலனி, அக்காள் மடம், தங்கச்சி மடம் ஆகிய இடங்களில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்றும் தெரிவித்து உள்ளனர்.