தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஏப்ரல் மாதம் திருப்புதல் தேர்வுகள்!
தமிழகத்தில் வரும் மே மாதம் 10 ,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடக்க உள்ள நிலையில் அதற்கு முன்னதாக ஏப்ரல் மாதம் திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
திருப்புதல் தேர்வுகள்:
தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாக மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நடத்தப்படாமல் மாணவர்களுக்கு அகமதிப்பீடு முறையில் இறுதி மதிப்பெண்கள் வழங்கப்பட்டு வந்தது. மாணவர்களின் உயர்கல்விக்கு சேர்க்கையானது 10 மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் தான் நடத்தப்படுகிறது. அகமதிப்பீடு முறையில் வழங்கப்பட்ட மதிப்பெண்கள் மூலம் மாணவர்களின் உயர்கல்விக்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் நடப்பாண்டில் அரசு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகளை நடத்த வேண்டும் என்று தீர்மானமாக திட்டமிட்டிருந்தது.
ரயிலில் பயணம் செய்வோர் கவனத்திற்கு – முக்கிய விதிமுறைகள் அறிவிப்பு!
அதற்காக மாணவர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. இதனால் நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்விற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. அதன்படி 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சில தினங்களுக்கு முன்னதாக வெளியிட்டுள்ளார். அதன்படி தேர்வுகள் மே மாதம் நடத்தப்படும்.
உக்ரைன் மீதான போர் தற்காலிகமாக நிறுத்தம் – ரஷ்யா அறிவிப்பு! உலக நாடுகள் நிம்மதி!
இந்நிலையில், மறைந்த அன்பில் தர்மலிங்கத்தின் 29வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி வி.என் நகரில் அமைந்துள்ள தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் அன்பில் தர்மலிங்கத்தின் படத்திற்கு அவரது பேரனும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் பொய்யாமொழி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் எவ்வித கவலையின்றி, மன மகிழ்வுடன் பயமின்றி படித்து தேர்வை எழுத வேண்டும். மனநிறைவுடன் தேர்வு எழுதி தங்களது குறிக்கோளை அடைய வேண்டும்.கொரோனா காரணமாக பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்ட பின்னர் பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்று கூறியுள்ளார்